திமுகவுக்கு வந்த அழுத்தம்..! தோற்றாலும் பரவாயில்லை... ஸ்டாலின் எடுத்த முடிவு..! அலறும் கூட்டணி கட்சிகள்..!

Published : Sep 24, 2025, 07:01 PM IST

2006ல் கலைஞர் கூட்டணி கட்சிகளுக்கு அதிகமான சீட்டு கொடுத்ததால் பெரும்பான்மைக்கான இடங்களை பெற முடியாத சூழ்நிலை வந்தது. இதை புரிந்து வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், 2021-லயே காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்தார்.

PREV
14

2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் அதிக தொகுதிகள் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது கூட்டணியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ், 2026-ல் 117 தொகுதிகளை கேட்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அதிக தொகுதிகள், கூட்டணி ஆட்சியை வலியுறுத்தியுள்ளனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக கூட்டணியை உதாரணமாகக் காட்டி, "கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரவேண்டும் வேண்டும்" என்கின்றனர்.

திமுக இதுவரை அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், கூட்டணி உறவு வலுவானது என்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி வருகிறார். காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்பதால், காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பிளவு வரும் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

24

ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்துக்கு வரும்போது தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்து 60 வருடங்களாகி விட்டது என ஆதங்கத்தை வெளிப்படுத்துவது போல பேசட்டும். இதற்கு திமுகவின் எதிர்வினை எப்படி இருக்கிறது எனப் பார்த்துவிட்டு அதற்கு மேல் நாம் முடிவு செய்வோம் என்கிற முடிவோடு ஒரு சந்திப்பை காங்கிரஸ் நிர்வாகிகள் பேசு முடிவு செய்துள்ளனர். ஆனால், திமுக தரப்பில் தனித்தே நாங்கள் ஆட்சி அமைப்போம். 200 ப்ளஸ் என்பதுதான் எங்களது இலக்கு. கூட்டணி ஆட்சிஉ எல்லாம் அறவே கிடையாது. திமுக தான் தனித்து ஆட்சி அமைக்கும் என நம்பிக்கையில் இருக்கிறது.

2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைத்தாலும் காங்கிரஸால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியாது. நீலகிரியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமியும், காங்கிரஸில் சிலர் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறார்கள் என்று சொல்லி கொளுத்தி போட்டு இருக்கிறார்.

34

சரி காங்கிரஸ் வேறு கூட்டணியில் ஒரு பக்கம் இருக்கட்டும். திமுக என்ன செய்ய யோசிக்கிறது என விசாரித்தால், ‘‘ கலைஞர் காலத்தில் இருந்த சூழ்நிலை எல்லாம் வேறு. எங்கள் முதல்வர் ஸ்டாலினுடைய காலமே வேறு. திமுக தனித்து ஆட்சி அமைக்கிற அளவிலான இடங்களை கைப்பற்றிய ஆக வேண்டும் என்பதில் ரொம்பவே தீவிரமாக இருக்கிறார் ஸ்டாலின். திமுகவில் மேலிருந்து கீழே வரை இருக்கும் யாருக்கும் மூச்சு விடக்கூட நேரமில்லாமல் நாள்தோறும் பொது கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

மற்ற கட்சிகளில் தலைவர்கள் மட்டும்தான் பிரச்சாரம் செய்கிறார்கள். திமுகவிலோ அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக இப்போதே பிரச்சார களத்தில் முந்திக் கொண்டு நிற்கிறார்கள். இப்படி திமுகவினர் அசராமல் உழைப்பதே தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்து விட வேண்டும் என்பதற்காகத்தான். திமுக தொடர்ந்து ஆட்சி அமைத்து தனிப்பெரும்பான்மையுடன் புது வரலாறு எழுத வேண்டும் என்று தான் கடுமையாக வேலை செய்து வருகிறார்கள்.

44

2006ல் கலைஞர் கூட்டணி கட்சிகளுக்கு அதிகமான சீட்டு கொடுத்ததால் பெரும்பான்மைக்கான இடங்களை பெற முடியாத ஒரு சூழ்நிலை வந்தது. இதை புரிந்து வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், 2021-லயே காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்தார். இப்பவும் அதே பார்முலாவை தான் கையில் வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

ஒருவேளை அப்படி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் போனாலும், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக உட்காரக்கூட தயாராக இருக்கிறாரே தவிர, கூட்டணி ஆட்சியை பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லை. இதுதான் எதார்த்தம்’’ என்று அணுகுண்டை போடுகின்றனர் அறிவாலயத்துக்கு நெருக்கமானவர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories