“நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்”... திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...!

First Published May 2, 2021, 8:25 PM IST

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது உறுதியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

பாரத பிரதமர் மோடி அவர்கள் "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள். தேசத்தை மேம்படுத்துவதற்கும், பிராந்திய நலன்களை நிறைவேற்றுவதற்கும், கோவிட் - 19 தொற்றுநோயை ஒழிப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். புகழ்பெற்ற தமிழ் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவோம் என தமிழக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். எங்கள் செயல்வீரர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
undefined
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். உங்கள் தலைமையின் கீழ் மக்களின் நம்பிக்கையை நாங்கள் பூர்த்தி செய்வோம். உங்களுக்கு எனது வாழ்த்துகள்’’ என பதிவிட்டுள்ளார்.
undefined
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில், “தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதற்காக திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
undefined
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தமிழக தேர்தலில் வெற்றிபெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
undefined
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் “ தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகள் உங்களுக்கு சிறப்பாக அமையவும், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படவும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
undefined
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஸ்டாலினுக்கு இது தகுதியான வெற்றி என்றும், நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
undefined
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஸ்டாலினுக்கு இது தகுதியான வெற்றி என்றும், நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
undefined
click me!