சிபி ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக-அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் பாஜக தமிழகத்திலும் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளதால் பலனை பெற முடியும். சிபி ராதாகிருஷ்ணன் தென்னிந்தியாவின் பிற மாநிலங்களிலும் பணியாற்றியுள்ளார். பாஜக தென்னிந்தியாவில் தனது வேர்களை வலுப்படுத்த முயற்சிக்கிறது. சிபி ராதாகிருஷ்ணனின் வெற்றி பாஜக தமிழ்நாட்டில் தன்னை நிலைநிறுத்த உதவும். தென்னிந்தியாவில் ஒரு வட இந்தியக் கட்சியாக பாஜக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த வெற்றியின் மூலம் பாஜக இப்போது அதை கடுமையாக மறுக்க முடியும்.
சிபி ராதாகிருஷ்ணனின் வெற்றிக்குப் பிறகு, என்டிஏ கூட்டணி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த கேள்விகளை எழுப்ப ஒரு வாய்ப்பு கிடைகத்திருக்கிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள பிஜேடி, பிஆர்எஸ் மற்றும் அகாலிதளம் ஆகியவை விலகியே இருந்து வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே பாஜக எதிர்க்கட்சி கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிறது.