விருது வழங்கி பாராட்டிய அண்ணாமலை
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உமா கார்க்கி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஜக ஆதரவாளரான உமா கார்க்கியை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உமா கார்க்கி நேற்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு முதல் நாள் பாஜக சார்பில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் மற்றும் சமூக ஊடக செயல் வீரர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உமா கார்கிக்கு சிறந்த செயல்பாட்டாளர் என விருது வழங்கி பாராட்டியிருந்தார். இந்தநிலையில் உமா கார்க்கிதொடர்பாக நடிகை கஸ்தூரி தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.