Kalaignar: சிறுவர் உருவில் வாழும் கலைஞர்..! நெகிழ்ச்சி தருணத்தின் வைரல் போட்டோஸ் இதோ !

Published : Jun 03, 2022, 02:32 PM ISTUpdated : Jun 03, 2022, 05:00 PM IST

Kalaignar Karunanidhi birthday : தான் கால்பதித்த கலை, எழுத்து, அரசியல் மற்றும் ஆட்சிப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தனித்தன்மையோடு தன் முத்திரையைப் பதித்தவர் கலைஞர் கருணாநிதி.  

PREV
18
Kalaignar: சிறுவர் உருவில் வாழும் கலைஞர்..! நெகிழ்ச்சி தருணத்தின் வைரல் போட்டோஸ் இதோ !

கலைஞரின்  98ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

28

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியான  இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச் சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். 

38

அதனைச் செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. 

48

அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

58

திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்க்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை நேரில் வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

68

அத்துடன் ட்ரோன் மூலம் மலர்கள் தூவப்பட்டது. சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின்  மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

78

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 91வது பிறந்த நாளையொட்டி சென்னையில் முதல் முறையாக இன்று மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.  சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை சார்பில் பிரமாண்ட மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு,  ஊட்டி, கிருஷ்ணகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மலர் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

88

திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்.  'உடன்பிறப்பே...' என நம்மை உளமார அழைத்து உணர்வூட்டிய தலைவர் ! இன்னும் ஓராண்டில் நூற்றாண்டு காணும் தமிழ்நாட்டின் தலைமகன் - தன் உதிரத்தால் எனைச் சமைத்த எந்தை 'தமிழினத் தலைவர்'  கலைஞரைப் போற்றினேன்' என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Read more Photos on
click me!

Recommended Stories