பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவு தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு ஈரானின் எதிரி நாடான சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஈரான் - சவுதி போரில் பாகிஸ்தான் ஈரானுக்கு எதிராகக் களம் காணும்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் முயன்று வருகின்றன. இந்தச் சூழலில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பைத் தனது தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடத்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஆர்வம் காட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இது தொடர்பான முன்மொழிவையும் அவர் வைத்துள்ளார். இருப்பினும், ஈரானின் பிடிவாதம், பாகிஸ்தானின் தற்போதைய உள்நாட்டுச் சூழல் காரணமாக இந்தச் சந்திப்பு நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே தென்படுகின்றன.
25
இடத் தேர்வில் ஈரானின் பிடிவாதம்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 12 மாதங்களில் இரண்டு முறை பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஏப்ரல் 2025-ல் வியன்னாவில் சந்திக்க அமெரிக்கா முயன்றபோது, ஈரான் அதை மறுத்து ஓமானின் மஸ்கட் நகரைத் தேர்ந்தெடுத்தது. மீண்டும் பிப்ரவரி 2026-ல் துருக்கியில் சந்திக்க அமெரிக்கா கோரியபோது, ஈரான் மீண்டும் ஓமானையே வலியுறுத்தியது. இறுதியில் ஓமானிலும் ஜெனீவாவிலும் பேச்சுவார்த்தைகள் நடந்தன.
தற்போது அமெரிக்காவே பாகிஸ்தானை முன்மொழிந்துள்ள நிலையில், அமெரிக்கா காட்டும் இடத்தை ஈரான் ஒருபோதும் ஏற்காது என்பதே கடந்த கால வரலாறு காட்டும் உண்மை. எனவே, பாகிஸ்தானில் சந்திக்க ஈரான் ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
35
பாதுகாப்புக் குறைபாடு- படுகொலை அச்சம்
அமெரிக்க ஊடகமான ஆக்சியோஸின் படி, ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தையை இறுதி செய்யக்கூடிய அதிகாரம் கொண்ட ஒரே தலைவரான எம்.பி. காலிபாஃபை நேரில் சந்திக்க அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், நியூயார்க் போஸ்ட் செய்தியின்படி, ஈரான் இதனை ஒரு 'பொறி'யாகக் கருதுகிறது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் தனது மூத்த தலைவர் காலிபாஃப் படுகொலை செய்யப்படலாம் என்று ஈரான் அஞ்சுகிறது.
இதற்கு முக்கியக் காரணம் பாகிஸ்தானின் தற்போதைய பாதுகாப்புச் சூழல். 2025-ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த நாடாகப் பாகிஸ்தான் உள்ளது. இவ்வளவு பதற்றமான ஒரு நாட்டிற்குத் தனது உயர்மட்டத் தலைவரை அனுப்ப ஈரான் எந்தச் சூழலிலும் முன்வராது.
பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவு தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு ஈரானின் எதிரி நாடான சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஈரான் - சவுதி போரில் பாகிஸ்தான் ஈரானுக்கு எதிராகக் களம் காணும்.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் மூன்று முறை பேசியும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பாகிஸ்தானியக் கப்பலான 'செலான்' செல்ல ஈரான் அனுமதிக்கவில்லை. இது இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசலை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, எகிப்து, கத்தார், ஓமான் போன்ற நாடுகளுக்குப் போர்களை நிறுத்தி அமைதி உடன்படிக்கை செய்த அனுபவம் உண்டு. ஆனால், பாகிஸ்தானோ தற்போது ஆப்கானிஸ்தானுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. வரலாற்று ரீதியாகப் போரிட்ட அனுபவம் மட்டுமே கொண்ட பாகிஸ்தானுக்கு, அமைதி உடன்படிக்கையை மத்தியஸ்தம் செய்யும் பக்குவம் இல்லை என்பதே நிதர்சனம்.
55
பாகிஸ்தான் வெறும் ஸ்டாம்ப்
அமெரிக்கா ஈரானுக்கு 15 நிபந்தனைகள் அடங்கிய முன்மொழிவை பாகிஸ்தான் வழியாக அனுப்பியிருந்தாலும், பாகிஸ்தான் ஒரு வெறும் 'ஸ்டாம்பாக' மட்டுமே செயல்பட முடியும். ஒருவேளை அங்கு சந்திப்பு நிகழ்ந்தாலும், அது ஒரு நல்லெண்ணப் பரிமாற்றமாக இருக்குமே தவிர, உறுதியான அமைதி ஒப்பந்தமாக மாறுவது கடினம். எகிப்து அல்லது ஓமான் போன்ற நாடுகளே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பிற்குப் பொருத்தமான இடங்களாக அமையும்.