‘‘பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால் விஜய் வெளியே வந்திருக்க முடியாது’’ என தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விளக்கமளித்துள்ளார்.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சம்மன் அனுப்பியது, ஜனநாயகன் படத்திற்கு ரிலீஸ் நேரத்தில் சென்சார் போர்டு சர்டிபிகேட்டை தாமதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் பாஜக மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் பாஜக அரசு விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ‘‘காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அவர்கள் ஆட்சியில் நடந்த மாதிரியான நினைப்பிலேயே இருக்கிறார்கள்.