தமிழக பாஜக மாநில தலைவராக பதவி வகித்து வந்த அண்ணாமலை நீக்கப்பட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அப்போது முதல் அண்ணாமலைக்கு பாஜகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. அவ்வப்போது அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் மட்டுமே வெளியாகி வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டதற்கான காரணத்தை ஆடிட்டரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி வெளிப்படையாகக் கூறியுள்ளார். அவர், ‘‘தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில் இருந்து வந்த பாஜக தற்போது 4 தொகுதிகளில் காலூன்றி உள்ளது. தமிழகத்தில் முக்கிய சக்தியாக பாஜக வளர வேண்டும் என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.