திமுக அரசில் 4 முதல்வர்கள்..! தேர்​தலின்​போது அமைச்​சர்​களுக்கு நேரப்போகும் கதி..! பகீர் கிளப்பும் இபிஎஸ்..!

Published : Jan 31, 2026, 02:10 PM IST

திமுக​வினர் கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.4 லட்​சம் கோடி வரை கொள்ளை அடித்​துள்​ளனர். தேர்​தலின்​போது பல திமுக அமைச்​சர்​கள் பத்​திர​மாக இருக்க வேண்​டிய இடத்​தில் இருப்​பார்​கள்.

PREV
14

அதிமுக சார்​பில் முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆரின் 109 பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டம், சென்னை கேகே நகரில் நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்று நலத்​திட்ட உதவி​களை வழங்கி பேசி​ய பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி, ‘‘நாட்டில் எத்​தனையோ தலை​வர்​கள் இருந்​தா​லும் மக்​களுக்​காக வாழ்ந்த ஒரே தலை​வர் எம்​ஜிஆர். எம்​ஜிஆரும், ஜெயலலி​தா​வும் வரலாறு படைத்த தலை​வர்​கள். இந்த பூமி உள்​ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்​கும்.

திமுக ஆட்​சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற இருக்​கிறது. அடுத்த மாதம் தேர்​தல் அறி​வித்து விடு​வார்​கள். ஏப்​ரல் முதல் வாரத்​தில் தேர்​தல் நடக்​கும். திமுக ஆட்​சிக்கு இன்​னும் 2 மாதங்​கள், 2 அமா​வாசைகள் தான் இருக்​கிறது. இந்​நிலை​யில் புதிய புதிய திட்​டங்​களை அறிவிக்​கிறார்​கள், அடிக்​கல் நாட்​டு​கிறார்​கள். ஒரு மாதத்​தில் திட்​டங்​களை நிறைவேற்ற முடி​யு​மா?

24

காங்​கிரஸ் – திமுக கூட்​ட​ணி​யில் குழப்​ப​மும், விரிசலும் வந்​தாகி​விட்​டது. உதயநி​தி, காங்​கிரஸ் கை கொடுக்​கும் என்​றார். ஆனால் கை நழு​வும் நிலை​யில் உள்​ளது. திமுக கூட்​ட​ணி​யில்​தடு​மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. அதி​முக பலம் வாய்ந்த கூட்​ட​ணியை அமைத்​துள்​ளது. அதி​முக கூட்​ட​ணி​யில் பல கட்​சிகள் வந்​துள்​ளன. இன்​னும் சில கட்​சிகள் வர உள்​ளன.

திமுக ஆட்​சியை எப்​போது வீட்​டுக்கு அனுப்​புவது என மக்​கள் தேர்​தலை எதிர்​நோக்கி காத்​திருக்​கின்​றனர். இந்த தேர்​தலில் நமது கூட்​டணி 210 இடங்​களில் வெல்​லும். அதி​முக தனி பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும். திமுக அரசில் ஸ்டா​லின், உதயநி​தி, சபரீசன், துர்கா ஸ்டா​லின் என 4 முதல்​வர்​கள் தமிழகத்தை ஆட்​டிப் படைக்​கின்​றனர். தமிழகத்தை 4 அதி​கார மையங்​கள் ஆண்டு கொண்​டிருக்​கின்​றன. திமுக​வினர் கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.4 லட்​சம் கோடி வரை கொள்ளை அடித்​துள்​ளனர். தேர்​தலின்​போது பல திமுக அமைச்​சர்​கள் பத்​திர​மாக இருக்க வேண்​டிய இடத்​தில் இருப்​பார்​கள்.

தமிழகத்​தில் பதற்​ற​மான சூழல் உரு​வாகி​யுள்​ளது. 699 சிறுமிகள் பாலியல் குற்​றங்​களால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​தி​யா​வில் இதை​விட மோச​மான ஆட்சி இது​வரை நடந்​த​தில்​லை. திமுக அரசில் எல்லா துறையிலும் ஊழல். நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை அனுப்பினர், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றம் அறிக்கையை ஆய்வுசெய்து உண்மையிருந்தால் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று கருதுகிறேன். எப்.ஐ.ஆர் போட்டால் தான் அமலாக்கத்துறை வரமுடியும்.

34

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது உடனடியாக எப்.ஐ.ஆர் போடுகிறார்கள். திமுகவினர் தவறு செய்தால் போடுவதில்லை. பல பேர் தேர்தல் நேரத்தில் பத்திரமாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சரானாலும் செந்தில் பாலாஜி தான் கவனிக்கிறார். இதையெல்லாம் விசாரித்து தான் டாஸ்மாக் கேஸ் பதிவு செய்திருப்பார்கள்.

கொஞ்சநஞ்ச ஊழலா செஞ்சீங்க? அரிசி பேர ஊழல், சர்க்கரை பேர ஊழல், கோதுமை, பூச்சிமருந்து, வீராணம் ஊழல். சர்க்கரை ஊழலில் அறிக்கை கொடுத்த கருணாநிதி சர்க்கரை மூட்டையில் இருந்த சர்க்கரையை எல்லாம் எறும்பு சாப்பிட்டுவிட்டதாம்? பிறகு அந்த சர்க்கரை சாக்குப்பையை கரையான் அரித்துவிட்டதாம். விஞ்ஞான முறையில் ஊழல் என்று சர்க்காரியா கமிஷனே குறிப்பிட்டுவிட்டது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு. தனால் தான் எம்ஜிஆர் தீயசக்தி திமுகவை வீழ்த்த வேண்டும் என்றார். அதிமுகவின் தாரக மந்திரமே அதுதான். வருகின்ற தேர்தலில் தீயசக்தி திமுகவை வீழ்த்துவீர்களா?

44

தினகரனும் இபிஎஸ்ஸும் கூட்டணி அமைத்ததைப் பற்றி கேட்கிறார்கள். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம், பிரிந்தோம் இப்போது அம்மாவின் அரசு அமைக்க ஒன்றாகி இருக்கிறோம். தீயசக்தி திமுகவை வீழ்த்தி அம்மா அரசை அமைக்க ஊழலற்ற அரசை அமைக்க ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணி அமைத்தோம். இதை பொறுக்க முடியாமல் எரிச்சலில் பேசுகிறார்கள்.

இபிஎஸ் கூட்டணி அமைக்க மாட்டார் என்றனர், எல்லா கூட்டணியும் அமைந்துவிட்டது. இன்று வைகோ என்னைப் பற்றி பேசுகிறார். வைகோ அவர்களே வயது காரணமாக உங்களைப் பற்றிப் பேசக்கூடாது, இருந்தாலும் இங்கு பேசித்தான் ஆகவேண்டும். நீங்கள் திமுகவை பேசாத பேச்சா? கருணாநிதி ஸ்டாலினை பற்றி என்னெவெல்லாம் திட்டினீர்கள். அவ்வளவு மோசமாக பேசிவிட்டு, அங்கு போய் கொத்தடிமையாக இருக்கீங்க’’ என்று அவர் பேசி​னார்.

Read more Photos on
click me!

Recommended Stories