என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மக்களே.. ஒரு சிம்பிளான கேள்வி. விஜயை நம்புறீங்களா? இல்ல ஸ்டாலின் சாரை நம்புகிறீங்களா? இந்த போர் முழக்கம் உங்களை இனி ஒரு நிமிடம் கூட தூங்க விடாது. கடைசி வாரம் டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவித்துவிட்டு உடனே கேன்சல் பண்ணி விட்டார்கள். இது உலகத்துக்கு எல்லாம் தெரியும். கேன்சல் செய்துவிட்டு டெக்னிகல் குறைபாடு என்கிறார்கள். எத்தனை வருஷமா ராத்திரி பகலா கஷ்டப்பட்டு எப்படியாவது இந்த வேலை கிடைக்க வேண்டும் என தேர்வை எதிர்கொள்ள வந்த தம்பி, தங்கைகள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள். அதை யோசித்து பார்த்தீர்களா? ஒரு எக்ஸாம் ஒழுங்கா நடத்த தெரியவில்லை. இதில் உலக நாடுகளுடன் போட்டி போடுகிறார்களாம்.
அம்மா அப்பா கிட்ட சொல்லுங்க. எல்லோரும் தைரியமாக இருங்கள். வரப்போவது உங்கள் ஆட்சி. நம்ம ஆட்சி. அதனால் இது போல் நடக்காமல் சமூக நீதிக்கான ஒரு நல்ல ஆட்சி அமைப்போம். இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை மனசில் வைத்துக் கொண்டு டிரான்ஸ்பரண்டாக அதற்கான ஒரு தீர்ப்பை காணவும் முயற்சிப்போம். நான் விக்கிரவாண்டி மாநாட்டில் பேசும்போது ஒரு பொலிட்டிக்கல் பாம்பு ஒன்று சொன்னேன். ஞாபகம் இருக்கிறதா? ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று ஒன்று சொன்னேன். இப்போது அந்த பொலிட்டிக்கல் பாம் எல்லா கூட்டணியிலும் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் சார் எல்லாம் பதறுகிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு எல்லாம் தமிழ்நாட்டில் ஒத்து வராது என்கிறார்.