நினைவிடத்தில் மரியாதை
இதனையடுத்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ள காட்டூருக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அந்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியம் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இதனையடுத்து திருவாரூர் கமலாலயக் குளத்தின் வடக்குக் கரையிலிருந்து படகின் மூலம் குளத்தின் நடுவில் உள்ள நடுக்குள நாகநாத சுவாமி கோயிலுக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது தனது பழைய நினைவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணனிடம் பகிர்ந்து கொண்டார்.