தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், சிபிஐ விசாரணைக்கான இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது மாநில சுயாட்சியை பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணம் என்று தமிழக அரசு தரப்பில் வாதிட்டது. செப்டம்பர் 27, 2025 அன்று தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம்காவல்துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தையும் அறிவித்தார்.
தவெக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாஜக சார்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அக்டோபர் 13, 2025 அன்று, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா தலைமையிலான அமர்வு, எஸ்.ஐ.டி, ஆணையத்தின் விசாரணைகளை இடைக்கால ரத்து செய்து, வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட்டது. இதை மூன்று கண்காணிப்புக் குழு. ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை) கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியது.