மம்தாவை போல சிக்குகிறார் மு.க.ஸ்டாலின்..? திமுகவுக்கு பாஜக வைத்த மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

Published : Aug 18, 2025, 01:14 PM IST

சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் என்.டி.ஏ வேட்பாளராக நியமிப்பதன் மூலம் பாஜக, காங்கிரஸை மாட்ட வைத்துள்ளது. சி.பி.ராதாகிருஷ்ண தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மு.க.ஸ்டாலினின் நண்பரும்கூட. இதனால், திமுக ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. 

PREV
15

சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் என்.டி.ஏ வேட்பாளராக நியமிப்பதன் மூலம் பாஜக, காங்கிரஸை மாட்ட வைத்துள்ளது. ஏனென்றால், சி.பி.ராதாகிருஷ்ண தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மு.க.ஸ்டாலினின் நண்பரும்கூட. இதனால், திமுக ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அப்பழுக்கற்றவர் என்கிற பிம்பம் உள்ளது. அவரது பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு, பல தகவல்கள் வெளியாகி வருகிறது. பாஜக தலைமை சிபி ராதாகிருஷ்ணனை அறிவித்ததற்கு பின்னணியில் பெரும் காய் நகர்த்தல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் ஒரு தமிழரை முன்னிறுத்துவது தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருக்காது என திமுக கூறுகிறது. 

இதனை வெளிப்படையாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். ‘‘ஒரு தமிழரை முன்னிறுத்துவது தமிழ்நாட்டிற்கு சாதகமாக இல்லை. ஏனென்றால் பாஜக தமிழ்நாட்டிற்கு எதிரானது. அவர்கள் தமிழ்நாட்டிற்கு நிதியை வழங்குவதில்லை’’ எனக் கூறியுள்ளார். திமுகவின் அரசியல் தமிழ் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது ஒருபுறமிருக்க, சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்ப்பது திமுகவுக்கு எளிதானதாக இருக்காது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

25

சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதற்கு முன், ஆகஸ்ட் 11 ம் தேதி அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அவர் உண்மையில், மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றது தற்செயலானதா? அல்லது அதற்குப் பின்னால் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? சி.பி.ராதாகிருஷ்ணன் மு.க.ஸ்டாலினைச் சந்திப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவரும், தூத்துக்குடி எம்.பி.,யுமான கனிமொழி, பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

35

தொகுதி, தமிழ்நாடு தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை கனிமொழி எழுப்பியதாக அவர் எக்ஸ்தளத்தில் கூறி இருந்தார். ஆனால், அப்போது துணை ஜனாதிபதித் தேர்தலில் பாஜக, திமுகவின் ஆதரவு வேண்டும் என மோடி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட எம்.பி.க்கள் குழுவில் கனிமொழியும் இருந்தார்.

45

வாக்காளர் பட்டியல், வாக்கு திருட்டு பிரச்சினையில் காங்கிரசுடன் சேர்ந்து திமுக ஆக்ரோஷமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக மென்மையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. ஆளுநர் vs மாநில அரசு வழக்கு, கல்வி நிதியை விடுவிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் என திமுகவின் தொடர்ச்சியான சட்ட வெற்றிகள் பாஜகவுக்கு ஒரு முள் போல் தைத்து வருகிறது. சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபடி வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸை தனிமைப்படுத்தும் பாஜகவின் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. சி.பி.ராதாகிருஷ்ணன், ஸ்டாலினுடன் சுமூகமான நட்பைக் கொண்டுள்ளார்.

திமுகவுடனான அவரது தொடர்புகள் பல வகைகளில் வெளிப்பட்டுள்ளன. முரசொலியின் முன்னாள் ஆசிரியரும், ஸ்டாலினின் உறவினருமான முரசொலி செல்வம் சென்னையில் இறந்தபோது, இரங்கல் தெரிவித்தவர்களில் சி.பி.ராதாகிருஷ்ணனும் ஒருவர். கோபாலபுரத்தில் உள்ள செல்வத்தின் இல்லத்தில் ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.

55

தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இடையிலான உறவு தமிழ்நாட்டில் சுமுகமாக இல்லை. துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டால், வரும் நாட்களில் அதன் நிழல் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான உறவின் மீதும் விழக்கூடும். இந்நிலையில், ஸ்டாலினுக்கு மூன்று வழிகள் உள்ளன. முதலில், அவர் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணியின் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இரண்டாவதாக, அவர் ஒரு தமிழராக இருப்பதை ஆதரிக்க வேண்டும். மூன்றாவது வழி, வாக்களிப்பில் பங்கேற்காமல் இருப்பது.

பாஜக, ஜக்தீப் தன்கரை வேட்பாளராக அறிவித்தபோது, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கசப்பான உறவுகள் இருந்தபோதிலும் அவரை எதிர்க்க முடியவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஸ்டாலினின் திமுக, சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்தாலோ அல்லது வாக்களிப்பதில் கலந்து கொள்ளாமல் இருந்தாலோ, காங்கிரஸ் தனிமைப்படுத்தப்படும். சி.பி.ஆரின் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு, காங்கிரஸ், இந்திய கூட்டணி இப்போது அரசியல் சாராத ஒரு முகத்தை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யத் தயாராகி வருவதாக ஒரு பரபரப்பு தகவலும் வெளியாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories