“என்னுடன் 40 முறை பேசியதாக அன்புமணி கூறுவது பொய். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதை விட மோசமான பொய்.
அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்” என ராமதாஸ் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அன்புமணிக்கும், ராமதாஸும் இடையே நடைபெற்று வந்த பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அன்புமணி பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், பாமகவில் இதுவரை யாரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கைகளில் அன்புமணி ஈடுபட்டதாக ராமதாஸும் அறிவித்துள்ளார்.