இது ஒரு கட்சி அல்ல - இது ஒரு தியாக இயக்கம்
1980 ஆம் ஆண்டு இயக்கம் தொடங்கி மின்சாரம் இவ்வாத காலம் சாலை இல்லாத கிராமங்கள்,மேடு பள்ளங்கள், வயல் வரப்புகள் வழியாக நடந்து, ராத்தல் விளக்கின் ஒளியில் மக்களின் துயரை கேட்டவன். 96,000-க்கும் மேற்பட்ட ஊர்களை காலால் அளந்தவன். தன்னலமின்றி உழைத்து ஒரு மக்கள் எழுச்சியை அரசியல் இயக்கமாக மாற்றியவன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள்.
தியாகத்தின் சொத்து விற்பனைக்கு அல்ல
அந்தத் தியாகத்தின் பயனாக உருவான பாட்டாளி மக்கள் கட்சி, இன்றும் என்றும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமே உள்ளது. இந்த இயக்கம் பதவி பேராசைக்கோ, போலி ஆவணங்களுக்கோ ஒருபோதும் அடிமையல்ல
முடிவு எடுக்கும் அதிகாரம் யாரிடம்?
எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும் அரசியல் முடிவும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமிருந்தே வர வேண்டும் என்பதே நீதிக்கும் நியாயத்திற்கும் ஒத்த உண்மை.