புல்லட் ரயிலில் ஸ்டாலின்
தனது இரண்டு நாள் ஓசாகா பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று புல்லட் ரயில் மூலம் டோக்கியோ வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து, இன்று (29.5.2023) காலை டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ (Mr. Ishiguro Norihiko) அவர்களையும், செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ (Mr. Kazuya Nakajo) அவர்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து,
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அளித்துவரும் ஆதாரவிற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.