World Biryani Day:
எப்பொழுதும் பிரியாணி என்றாலே அதை விரும்பி உண்ண பெரும்பாலான மக்கள் காத்திருப்பார்கள்.சமீப காலமாக பிரியாணி விற்பனை அதிகரித்துள்ளது. இன்றைய நவீன காலத்தில், பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு.
World Biryani Day:
திண்டுக்கல் தலப்பாக்கட்டி:
தென் பகுதி சுவை உங்களுக்கும் பிடிக்கும் என்றால், சென்னை திண்டுக்கல் தலப்பாக்கட்டி பத்தாண்டுகளுக்கு முன்பு நாகசாமி நாயுடுவால் தொடங்கப்பட்டது. இங்கு வழங்கப்படும் பிரியாணி சிறந்த தரம் வாய்ந்தது. பாஸ்மதி, சீரக சம்பா, பொன்னி அரிசியுடன், இளம் ஆட்டி குட்டியின் துண்டுகளுடன் சமைக்கப்பட்டு, பரிமாறப்படுகிறது. இதன் மணம் பத்து தெரு தாண்டி மணக்குமாம்.
World Biryani Day:
டெல்லி நசீர் இக்பாலின் சுவையான மட்டன் பிரியாணி:
டெல்லியின் நசீர் இக்பாலின் சுவையான மட்டன் பிரியாணி நறுமணமான அரிசி, இறைச்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து சமைக்கப்படுகிறது. இது உலகளவில் புகழ் பெற்ற உணவு வகை என்றும் கூறலாம். டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள, பாரம்பரிய இரும்பு பித்தளை பாத்திரங்கள் சமைக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் மட்டன் ஸ்டாக் எனப்படும் வேக வைக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.