சிலருக்கு சொந்த வீடு கட்டுவதே கனவாக இருக்கும். தனக்கென ஒரு வீடு, அறை என்பது பலருக்கும் நெடுநாள் கனவாக இருக்கும். அப்படி கனவு இல்லத்தை கட்டும் போது பார்த்து பார்த்து கட்டுவார்கள். சிலர் வீடு அழகாய் இருப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வீட்டில் உள்ள வசதிகளை சரியாக செய்வதில் கொடுப்பதில்லை. வீட்டை ஒரு முறை கட்டிய பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகுதான் மறுசீரமைப்பு செய்கிறோம். விலைவாசி இருக்கும் நிலைமைக்கு ஒருமுறை கட்டுவதோடு போதும்டா சாமி! என்றாகிவிடுகிறது. அப்படிகட்டும் வீட்டில் முக்கியமாக செய்ய வேண்டிய வசதி குறித்து இங்கு காணலாம்.