தங்க சாம்பல் உணவு:
பாட்டியாலா அரசர் தன்னுடைய ஆற்றலை அதிகரிக்க முத்து, தங்கம், வெள்ளி மற்றும் பல்வேறு மூலிகைகளை கலந்து சாப்பிட்டு வந்தாராம். இவருக்காக சிட்டுக்குருவிகளின் மூளையை தனியே எடுத்து அதில் இருந்து சிறப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. சிட்டுக்குருவியே சிறிய உயிரினம் தான் அதனுடைய மூளையைப் பிரித்தெடுத்து, அத்துடன் கேரட்டைச் சேர்த்து ஒரு சிறப்பு மருந்து செய்து கொடுத்துள்ளார்கள்.
இதனால் வலிமையை அதிகரிக்கும் என நம்பிக்கை இருந்துள்ளது. இது தவிர அரசர் பூபேந்திர சிங் தங்கச் சாம்பலைத் தொடர்ந்து சாப்பிட்டுள்ளார். ஆனால் உடல்நலக்குறைவால் தான் இறந்துவிட்டார். எந்த தங்கமும், வெள்ளியும் அவர் ஆயுளையும், வலிமையையும் கூட்டவில்லை போலும்.
அவாத்தின் கடைசி நவாப் வாஜித் அலி ஷாவும் தன்னுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறப்பு மருத்துவர்களை நியமித்தார். அவர்களும் நாள்தோறும் புதுப்புது உணவுகளை தயார் செய்து கொடுத்தனர். அதில் நவாப் விரும்பிய உணவு ஸ்வரன் பாஸ்மா தான். அதனை அவர் பாலுடன் சாப்பிட்டு வந்தார்.
நவாப் வாஜித் அலி ஷாவுக்கு பிடித்த மற்றொரு உணவு முத்தஞ்சன். முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பிற உலர் பழங்கள், குங்குமப்பூ நிற அரிசி போட்டு சமைக்கும் இனிப்பு உணவாகும். இது கோயா மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் பரிமாறப்பட்டது.