தளபதி
மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த தளபதி படம் நட்பிற்கு சிறந்த இலக்கணமாக தற்போதும் ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி ஆகிய இருவருக்கும் இடையேயான நட்பை இயக்குனர் மணிரத்னம் காட்டி இருந்த விதம் தற்போதும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த படத்தில் இடம்பெற்ற ''காட்டு குயிலு'' பாடல் வரிகள் இன்றும் பலரது வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்ஸில் பார்க்கலாம்.
வாலி எழுதி எஸ் பி பாலாசுப்ராமணியன் மற்றும் , K.J.யேசுதாஸ் பாடிய அசத்திய ''காட்டு குயிலு'' பாடல் வரிகள் சில உங்களுக்காக
பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே..
உள்ள மட்டும் நானே..உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டால்...வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு...நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன் வரிகள் நட்பின் உன்னதத்தை உணர்த்தும் ஆழமாக கருத்தாகும்.