முதன்முதலில் 1958-ல் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2011 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஜூலை 30ம் தேதி சர்வதேச நட்பு தினத்தை அறிவித்தது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை, நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி, வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் வரும் ஞாயிறு அன்று நண்பர்கள் தினத்தை கொண்டாடுகிறது.
பணத்தை எளிதில் சம்பாதித்து விடலாம், ஆனால் நல்ல நண்பர்களை எளிதில் சம்பாதிக்க முடியாது. எனவே, நம் அன்றாட வாழ்வை உற்சாகமானதாக வைத்து கொள்ள நண்பர்கள் அவசியம். எனவே, நீங்கள் இந்த நாளில் பிரிந்து போன நண்பர்களை தேடி, நட்பு கொள்ளுங்கள். புதிய நபர்களைச் சந்தித்து நல்லுறவை பேணுங்கள். அவர்களுக்கு சிறந்த நண்பர்கள் தின பரிசுகளை வாங்கி கொடுங்கள். இந்த 2022ம் ஆண்டு நண்பர்கள் தினத்துக்கு ஒரு நல்ல கிஃப்ட் வாங்கணும் என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.