மாப்பை சுத்தம் செய்யாமல் இருப்பது:
பல சமயங்களில் பலர் மாப்பை சரியாக சுத்தம் செய்வதில்லை. எப்போதுமே அழுக்கு மாப் கொண்டு தான் தரையை சுத்தம் செய்கிறார்கள். இதனால் தரையை சரியாக சுத்தம் செய்யாமல் போவது மட்டுமல்லாமல், மாப் துணியில் சிக்கி உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் வீட்டிற்குள் பரவி ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை விளைவிக்கும். எனவே நீங்கள் எப்போதும் தரைக்கு மாப் போடுவதற்கு முன் முதலில் மாப்பை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யுங்கள். இது தவிர, நீங்கள் தரையை துடைத்த பிறகும் மாப்பை நன்கு சுத்தம் செய்து காய வைக்க வேண்டும்.