Sani Peyarchi 2022 Palangal: கடந்த ஜூலை 12 ஆம் தேதி 2022 சனி வக்ர பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அடுத்த ஜனவரி மாதம் வரை மிகவும் சாதகமான் சூழல் அமையும். எனவே, அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தின் பார்வையில், சனியின் வக்ர பெயர்ச்சி மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது நம்முடைய வாழ்வில் தீய மற்றும் நல்ல பலன்களை தரும். சனி பகவான் இந்த நேரத்தில் வக்ர நிலையில் பின் நோக்கி கும்பத்தில் உள்ளது. இன்று அதாவது கடந்த ஜூலை 12 ஆம் 2022 தேதி, மகர ராசியில் மீண்டும் சனி பகவான் வக்ர பெயர்ச்சியாகியுள்ளார். அதன்படி, இந்த பெயரச்சி அடுத்த ஆண்டு ஜனவரி 2023, வரை நீடிக்கும். எனவே இந்த சனி வக்ர பெயர்ச்சியால் யாருக்கு வரப்பிரசாதமாக அமையும், யாருக்கு சிறப்பாக இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்வோம்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். வாழ்வில் தொட்ட காரியங்கள் அனைத்து வெற்றியில் போய் முடியும். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த பணிகள் முடியும். இந்த நேரத்தில் பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு இருக்கும்.
மகர ராசியில் சனியின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். நீண்ட பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். இல்லையெனில் பல்வேறு பிரச்சனைகள் வரும். உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். போட்டி தேர்வுகளுக்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
மகர ராசியில் சனியின் வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இந்த நேரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். வேலையில் வெற்றி உண்டாகும். பழைய விவகாரம் தீர்வுக்கு வரும். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழில் சிறப்பாக நடக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.