நவராத்திரி நாளில் துர்கா தேவியின் நேரடி அருளை பெறும் 3 ராசிகள்..அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளில் நீங்களும் ஒருவரா?

Published : Sep 24, 2022, 11:47 AM IST

Navratri 2022 horoscope: நவராத்திரி நாளில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு துர்கா தேவி சிறப்பான அருளை தர இருக்கிறார். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

PREV
15
நவராத்திரி நாளில் துர்கா தேவியின் நேரடி அருளை பெறும் 3 ராசிகள்..அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளில் நீங்களும் ஒருவரா?
Navratri

இந்த 2022 ஆண்டு நவராத்திரித் திருவிழா வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களும் சிறப்பாக வழிபடப்படுகின்றன. இதனால் வாழ்வில் பல்வேறு நன்மைகள் வந்து சேரும் என்பது ஐதீகம். 

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மிதுனம், கன்னி ராசிகளுக்கு வரும் நாட்களில் பண இழப்பு..! உங்கள் ராசிக்கு என்ன பலன்

 

25
Navratri

செப்டம்பர் 26 ஆம் தேதி கலசம் வைக்க சிறந்த நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் போல இந்த நாளில் துர்கா தேவி யானை மீது பயணிக்கிறார். ஜோதிடத்தின் படி, இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு துர்கா தேவி சிறப்பான அருளை தர இருக்கிறார். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

35
Navratri

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு துர்கா தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும். உத்தியோகத்தில் விரிவாக்கம், இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வேலையைத் தொடங்க நல்ல நேரம். துர்க்கை அம்மனின் அருளால் செல்வம் பெருகும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். பயணம் வெற்றியடையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

45
Navratri

கடகம்:

 நவராத்திரி காலத்தில் கடக ராசிக்காரர்கள் நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். அறிவுசார் செயல்பாடுகள் வருமான ஆதாரமாக மாறும். கோபத்தின் தீவிரம் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நண்பரின் உதவியால் வியாபாரம் வேகமெடுக்கும். புதிய வியாபாரத்திற்கான சில திட்டங்கள் நிறைவேறும். வேலையில் வெற்றி உண்டாகும்.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மிதுனம், கன்னி ராசிகளுக்கு வரும் நாட்களில் பண இழப்பு..! உங்கள் ராசிக்கு என்ன பலன்
  

55
Navratri

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு துர்கா தேவியின் நேரடி அருள் நிச்சயம். திருமணமான தம்பதிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கல்விப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். தொழில் நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்பத்தில் சமய காரியங்கள் நடைபெறலாம். உங்களுக்கு தொழிலில் மரியாதை கிடைக்கும். நீண்ட பயணங்கள் மேற்கொள்ளப்படும்.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மிதுனம், கன்னி ராசிகளுக்கு வரும் நாட்களில் பண இழப்பு..! உங்கள் ராசிக்கு என்ன பலன்

Read more Photos on
click me!

Recommended Stories