Published : Dec 04, 2024, 12:11 PM ISTUpdated : Dec 04, 2024, 01:43 PM IST
Travel: ராஜஸ்தானில் பளிங்கு கழிவுகள் கொட்டப்படும் கிஷன்கர் நகர் சுற்றுலாத்தலமாக உருவெடுத்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர்.
இந்தியாவில் சுற்றுலாவிற்கு மிகவும் பெயர் பெற்று விளங்கும் மாநிலம் ராஜஸ்தான். இந்த மாநிலத்தில்தான் நாட்டிலயே அதிகமான புரதான கோட்டைகள், அரண்மனைகள் உள்ளன. மேலும் ராஜஸ்தானுக்கு வறண்ட மாநிலம் என்ற மோசமான பெயரையும் பெற்று விளங்குகிறது. ஏனெனில் மிகவும் பிரபலமான தார் பாலைவனம் ராஜஸ்தானில்தான் அமைந்துள்ளது. தார் பாலைவனம் சுமார் 61% நிலப்பரப்பை ராஜஸ்தானில் தான் கொண்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பிங்க் சிட்டி என அழைக்கப்படும் ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் உள்ள ஒரு இடம் ஜம்முகாஷ்மீரில் வெண் மேகங்கள் சூழ்ந்து இருப்பதை போன்று மிகவும் அழகாக இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்.. ராஜஸ்தானின் நிலவு நிலம் என்று அழைக்கப்படும் கிஷன்கர் என்ற சிறிய தொழில் நகரத்தை பற்றிதான் நான் இப்படி குறிப்பிடுகிறேன்.
24
tourism in India
மார்பிள் தொழிலுக்கு பெயர் பெற்ற கிஷன்கர் நகரில் எங்கு பார்த்தாலும் மார்பிள்கள் மிக அழகாய் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். மார்பிள்களே அங்கு பிரதான தொழில் என்பதால் பளிங்கு கற்களை வெட்டும்போது பல்லாயிரம் டன் கணக்கில் கழிவுகள் உருவாகி நகரையே அலங்கோலமாக்கியது. தொடர்ந்து நகரை மாசுபடுத்தி வரும் பளிங்கு கழிவுகள் நகர அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது.
இதனால் கிஷன்கர் நகர நிர்வாகமும், பளிங்கு தொழில் அசோஷியனை சேர்ந்தவர்களும் இணைந்து பளிங்கு கழிவுகளை ஒரே இடத்தில் கொட்ட முடிவு செய்தனர். அதன்படி பளிங்கு கழிவுகள் அனைத்தையும் சேகரித்து கிஷன்கர் நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள டம்பிங் யார்டில் கொண்டு கொட்டினார்கள். நகரத்தில் அரசு நிர்வாகத்துக்கு பெரும் தலைவலியாக இருந்த இந்த பளிங்கு கழிவுகள் இப்போது அவர்களுக்கு பெரும் வருவாய் ஈட்டி தரும் இடமாக மாறியுள்ளது. அதாவது பளிங்கு கழிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்துள்ளதால் அந்த இடம் முழுவதுமே பனி போர்த்தியதுபோல் மிக அழகாக காட்சியளிக்கிறது. இதை பார்க்கும்போது இது ராஜஸ்தானா? இல்லை காஷ்மீரா? என்ற பசுமையை நமக்குள் கொண்டு வந்து விடுகிறது.
34
tourist places in India
முற்றிலும் வெண்மையான பனி போர்த்தியதுபோல் காணப்படும் இந்த இடம் சுற்றுலா பயணிகளின் கண்களில் இருந்து தப்பித்து விடுமா என்ன? ராஜஸ்தானுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் கிஷன்கர் நகரில் உள்ள இந்த பளிங்கு கழிவுகளுக்கு சாரி.. சாரி.. இந்த அழகான பனி போர்த்தியபோதுபோல் இருக்கும் இடத்துக்கு செல்ல தவறுவதில்லை. இதனால் தவிர்க்கமுடியாத டூரிஸ்ட் ஸ்பாட் ஆக இப்போது கிஷன்கர் நகர் மாறி விட்டது.
ராஜஸ்தான் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பளிங்கு கழிவுகள் கொட்டப்பட்டு இருக்கும் இடத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர். மேலும் திருமணமான தம்பதிகள் போட்டோஷுட் எடுத்துக் கொள்வது, திரைப்படங்களின் படப்பிடிப்புகள் என இப்போது கிஷன்கர் நகரின் டம்பிங் யார்டு மிகவும் பிசியாகி விட்டது.
பளிங்கு கழிவுகள் கொட்டப்படும் இடம் இப்படி பிரபலமான சுற்றுத்தலமாக மாறும் என கிஷன்கர் நகர அதிகாரிகள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிமீ பயணித்தால் நீங்கள் கிஷன்கர் நகரை அடைய முடியும். பளிங்கு கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடதுக்கு செல்ல நுழைவுக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.
ஆனால் கட்டணமில்லா டோக்கன் முறை உள்ளது. அதே வேளையில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் உண்டு. மொபைலில், மற்ற கேமராக்களில் போட்டோ, வீடியோ எடுக்க எந்த கட்டணமும் கிடையாது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அப்புறம் என்ன இன்னும் யோசிக்கிறீங்க? உடனே ராஜஸ்தானுக்கு டிக்கெட் போடுங்க!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.