நீண்ட நாள் முடி உதிர்வு, நரை முடி பிரச்சனைக்கு, பக்க விளைவு இல்லாமல் தீர்வு தரும் இந்த ஒரு பொருள் இருக்கு..!

First Published Oct 26, 2022, 10:46 AM IST

White hair to black hair naturally oil: நீண்ட நாள் முடி உதிர்வு, நரை முடி பிரச்சனைக்கு, இயற்கை முறையில் சரி செய்ய கூடிய, இந்த குறிப்பையும் ஒரு முறை மட்டுமே முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

நம்மில் பல பேருக்கு ரொம்ப நாளா தலைமுடி கொட்டுவதில், வளர்வதில் பிரச்சனை   இருக்கும். இன்னும் சிலருக்கு நரை முடி பிரச்சனை இருக்கும். இதற்காக நாம் என்னதான் கெமிக்கல் மருந்து உள்ளிட்டவை பயன்படுத்தி பல முயற்சி செய்து பார்த்தாலும், ரிசல்ட் சரியாக கிடைக்கவே கிடைக்காது. இதனால், நம்முடைய ஆரோக்கியம் கெட்டு போகவும், உடல்நலத்தில் பிரச்சனை வருவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் வரவிருக்கும் பெரிய பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, கூடுமானவரை அன்றாடம் செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. 

அந்த வரிசையில், இயற்கை முறையில் சரி செய்ய கூடிய, இந்த குறிப்பையும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். ஆனால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதம் இந்த குறிப்பை பின்பற்றி வரும்போது, நல்ல ரிசல்ட் தெரிவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வாங்க அந்த எளிமையான குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

முதலில் உங்களுடைய நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற மஞ்சள் தூள், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய், இந்த மூன்று பொருட்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்.முதலில் இரண்டிலிருந்து மூன்று டேபிள் ஸ்பூன் அளவு சுத்தமான மஞ்சள் தூள் எடுத்து ஒரு இரும்பு கடாயில் போட்டு காபி பவுடர் நிறத்திற்கு சிவந்து  வரும் வரை வறுத்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...வெறும் பத்து நிமிடம் இருந்தால் போதும்..தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் சுலபமாக எடுக்க சூப்பர் டிரிக்ஸ் இருக்கு

பின்னர், அடுப்பை அணைத்து விட்டு, நன்றாக சூடினை ஆற வைத்து விடுங்கள். பின்னர், அதனுடன் 1 ஸ்பூன் அளவு மட்டும் விளக்கெண்ணெய் ஊற்றி, அந்த மஞ்சள் பொடியை கலக்குவதற்கு தேவையான தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். ஓரளவுக்கு திக்கான ஆயில் கருப்பு நிறத்தில் நமக்கு கிடைத்திருக்கும். இதை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ளுங்கள்.

எந்தெந்த இடங்களில் எல்லாம் நரைமுடி இருக்கிறதோ அந்தந்த இடத்தில் எல்லாம் இந்த எண்ணெயை தேய்த்தால் உங்களுடைய வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும். பின்னர், 2 முதல் மூன்று மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து கொள்ளுங்கள்.

பின்னர், முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் 10 நாட்டு செம்பருத்தி பூ, 10 நாட்டு செம்பருத்தி இலை, எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கரைக்க வேண்டும். இதை நன்றாக வடிகட்டிக் கொள்ளுங்கள். ஜெல் மட்டும் தனியாக நமக்கு கிடைத்துவிடும். 

இந்த ஜெல்லில் நீங்கள் தலைக்கு குளிக்க கூடிய ஷாம்பு 1 டேபிள் ஸ்பூன் போட்டு, நன்றாக கலந்து இதை தலைக்கு போட்டு கசக்கி குளிக்க வேண்டும். சீயக்காய் இருந்தால் கூட அந்த சீயக்காயை இந்த ஜெல்லில் போட்டு கலந்து வைத்து தலைக்கு குளிக்கலாம். தலை முடி சூப்பரா ஷைனிங்கா உதிராமல் அடர்த்தியாக வளர தொடங்கும்.

மேலும் படிக்க...வெறும் பத்து நிமிடம் இருந்தால் போதும்..தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் சுலபமாக எடுக்க சூப்பர் டிரிக்ஸ் இருக்கு

click me!