Tea Lovers: காலையில் டீ அருந்துபவரா நீங்கள்? அப்படினா..! கண்டிப்பா கவனிங்க, வெளியானது புதிய ஆய்வு ரிப்போர்ட்..

First Published Sep 5, 2022, 9:45 AM IST

Tea Lovers: தினமும் காலை எழுந்தவுடன் டீ என்கிற தாரக மந்திரத்தை கடைபிடிப்பவரா நீங்கள்..? உங்களின் சட்டை காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம் என்கின்றது பிரிட்டனின் புதிய ஆய்வு முடிவு.

tea -britain


காலையில் தேநீர் அல்லது காபி குடிக்கும் வரை மற்ற வேலைகளை செய்ய நம்மில் பலருக்கு மனம் வராது. ஏனெனில், டீ அல்லது காபி குடித்த பிறகுதான் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பது போல உணர்கிறோம். அந்த அளவுக்கு தேநீருக்கென்று பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பல பேச்சிலர்களுக்கு தேநீர் தான் உணவாகவே இருக்கிறது.  எவ்வளவு களைப்பாக இருந்தாலும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் அவ்வளவு களைப்பு போயி சுறுசுறுப்பாக மாறுவதாக தேநீர் பிரியர்கள் கூறுகின்றனர்.

 மேலும் படிக்க...வீட்டின் நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால் போதும்..வீட்டிற்குள் எந்த தீய சக்தியையும் தடுத்து நிறுத்தும்..

tea -britain

பொதுவாக தேநீர்கள் இந்தியர்களை ஒருங்கிணைப்பதாக கூறப்படுகிறது, தற்போது இதனை வெளிநாடுகளிலும் விரும்ப தொடங்கிவிட்டனர்.  அப்படியாக, உலகளவில் அதிகமான மக்களால் ரசிக்கப்படும் ஒரு அற்புதமான பானம் என்றால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அதற்கு பதில் தேநீர் தான் என்று சொல்லலாம்.  ஆனால், இது நமக்கு பல்வேறு உடல் நலம் பாதிப்புகளை உண்டாக்கும் என்கின்ற அச்சம் நம்மிடம் இருந்தது..இந்நிலையில், அதனை உடைக்கும் வகையில் புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. 

tea -britain

பிரிட்டனின் தேதிய புற்றுநோய் நிறுவனம் நடத்திய ஆய்வில், அன்றாடம் 2 முதல் 3 கப் டீ குடிப்பவர்களுக்கு, அவர்களின் வாழ்நாளில் மரண ஆபத்து குறைவு என்றும், மற்றவர்களை விட 9- 13 சதவீதம் வரை ஆயுள் அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 மேலும் படிக்க...வீட்டின் நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால் போதும்..வீட்டிற்குள் எந்த தீய சக்தியையும் தடுத்து நிறுத்தும்..

tea -britain.

சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த இந்த ஆய்வில், 40 முதல் 69 வயதுடைய நபர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தாங்கள் கறுப்பு தேநீரையே குடிப்பதாக தெரிவித்துள்ளனர்.2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இந்த ஆய்வு சுமார் 11 ஆண்டுகள் நடத்தப்பட்டது.

tea -britain

இருப்பினும், இதில் பால் அல்லது சர்க்கரை கலந்துள்ளதா..? மற்றும் மனித உடலிய மாற்றத்தை உண்டாகும் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளதா  என்பது குறித்தும், இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்படவில்லை என்று ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்புறம் என்ன இனி இந்த செய்தியை கொண்டா சூடான ஒரு டீ குடிக்கலாம் வாங்க பாஸ்..

 மேலும் படிக்க...வீட்டின் நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால் போதும்..வீட்டிற்குள் எந்த தீய சக்தியையும் தடுத்து நிறுத்தும்..

click me!