Published : Oct 28, 2023, 04:18 PM ISTUpdated : Oct 28, 2023, 04:30 PM IST
பல சமயங்களில் குழந்தைகள் அழும் போது அம்மா அவர்கள் பசியாக இருப்பதாக நினைக்கிறார்கள். சிலர் குழந்தைகளின் அழுகையை ஒரு நோயாகக் கூட கருதுகின்றனர். ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவை...
குழந்தைகள் அழுவதற்கான காரணங்கள்:
குழந்தைகள் அழுவது மிகவும் பொதுவானது. அவர்கள் தங்கள் பெற்றோரை அழைக்க அழுகிறார்கள், ஆனால் உங்கள் குழந்தை நீண்ட நேரம் தொடர்ந்து அழுதால், அவருடைய வலியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் தொடர்ச்சியான அழுகை பல காரணங்களால் இருக்கலாம், ஆனால் நோய் மட்டுமல்ல. இவற்றில் ஐந்து முக்கிய காரணங்கள் உள்ளன. குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம் என்று பார்ப்போம்...
26
உடைகள் இறுக்கமாக இருக்கலாம்: பல நேரங்களில் குழந்தைகள் இறுக்கமான ஆடைகளை அணிந்திருப்பதால் அழ ஆரம்பிக்கிறார்கள். அதுமட்டுமன்றி, அவர்கள் இதனை சங்கடமாகவும் உணர்கிறார்கள். எனவே, குழந்தைகளுக்கு எப்போதுமே தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துங்கள்.
36
தாயின் மோசமான உணவுப் பழக்கம்: தாய் எதைச் சாப்பிட்டாலும் அது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. எப்படியெனில், தாய் குழந்தைக்கு பால் கொடுப்பதன் மூலம். மேலும் வறுத்த மற்றும் காரமான உணவுகளை தாய் அதிகமாக சாப்பிட்டால் அதன் தாக்கம் குழந்தைகளை பெரிதும் பாதிக்கும். இதனால் தான் குழந்தைகள் அழ தொடங்குகிறார்கள். உதாரணமாக, வயிற்று வலி அல்லது வாயு பிரச்சனை போன்றவை ஏற்படும்.
அதிகப்படியான உணவு: பல நேரங்களில், தெரிந்தோ தெரியாமலோ, தாய் குழந்தைக்கு அதிக பால் கொடுப்பதுண்டு. அதே சமயம், சில சமயங்களில் அவசர அவசரமாக குழந்தைகளுக்கு உணவளிப்பதும் அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் குழந்தைகள் அழுவதுண்டு.
எலும்பு பாதிப்பு: சிறு குழந்தையின் எலும்புகள் மிகவும் மென்மையானவை. சிறிதளவு கவனக்குறைவால் அவர்களின் எலும்புகள் பாதிப்படையும்
அபாயம் உள்ளது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் பொதுவாக யாரேனும் ஒருவர் திடீரென குழந்தையை கை அல்லது கழுத்தை பிடித்து தூக்கும் போது ஏற்படும். இதனால் குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு குழந்தையின் எலும்பு அதன் இடத்தில் இருந்து நழுவினால், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
கோலிக் நோய்: ஒரு குழந்தை தினமும் மாலையில் ஒரே நேரத்தில் அழுதால், அவர் கோலிக் நோயால் பாதிக்கப்படலாம். இந்த நோயினால் குழந்தைகளுக்கு
வயிற்றுப் பிடிப்பு மற்றும் நிறைய வலியை அனுபவிக்கிறார்கள். பெரும்பாலும் குழந்தைகள் மூன்று மாதங்களுக்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயில், குழந்தைகள் பல மணி நேரம் அழுவார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.