வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் யாரிடமும், ஏன் தப்பித்தவறி கூட சொல்லக் கூடாதுன்னு சாணக்கியர் தனது நீதியில் குறிப்பிடுகிறார். இந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால், அதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.
ஆச்சார்ய சாணக்கியர், தன் காலத்தின் மிகச்சிறந்த அறிவாளியாகப் பார்க்கப்பட்டார். அவர் போதித்த விஷயங்கள்தான் 'சாணக்கிய நீதி' என அழைக்கப்படுகிறது. இதைப் பின்பற்றினால், மகிழ்ச்சியான, செழிப்பான வாழ்க்கையை வாழலாம் எனக் கூறப்படுகிறது.
26
"யாரிடமும் தப்பித்தவறி கூட சொல்லக் கூடாது"
சாணக்கியர் தனது நீதியில், சில முக்கியமான விஷயங்களை யாரிடமும், தப்பித்தவறி கூட சொல்லக் கூடாது என்கிறார். அப்படி பகிர்ந்துகொண்டால், அதை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும். சில சமயம், உங்களை விட்டு விலகியும் போகலாம். அப்படிப்பட்ட விஷயங்கள் என்னென்னனு பார்க்கலாம் வாங்க.
36
பண நஷ்டம் உள்ளதா?
சாணக்கியரின்படி, உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பண நஷ்டம் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. அப்படி நீங்கள் யாரிடமாவது பண நஷ்டம் பற்றிப் பேசினால், அவர்கள் உங்களை ஒரு முட்டாளாகக் கருதி, உங்களிடமிருந்து விலகிச் செல்லத் தொடங்குவார்கள்.
நீங்கள் எவ்வளவு பெரிய துக்கத்தில் இருந்தாலும், அதை யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. சாணக்கிய நீதியின்படி, உங்கள் மன வலியை யாரிடமாவது சொன்னால், அவர்கள் உங்களைக் கேலி செய்ய வாய்ப்புள்ளது.
56
அவமானங்களை சொல்லாதே.!
வாழ்க்கையில் யாராவது உங்களை அவமானப்படுத்தியிருந்தால், அதை யாரிடமும் சொல்லக் கூடாது. தப்பித்தவறி யாரிடமாவது இதைச் சொன்னால் கூட, மற்றவர் பார்வையில் உங்கள் மீதான மரியாதை குறைந்துவிடும்.
66
உங்கள் வீட்டுப் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு
ஒவ்வொரு வீட்டுக்கும் அதன் சொந்தப் பிரச்சினைகளும், கஷ்டங்களும் இருக்கும். சாணக்கியரின்படி, உங்கள் வீட்டுப் பிரச்சினைகளை மற்றவர்களுடன் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தால், மற்றவர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.