Cobra Village: பாம்புகளோடு குடும்பம் நடத்தும் மனிதர்கள்! கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் கோப்ரா சிட்டி.. மிரள வைக்கும் பின்னணி!

Published : Jun 19, 2026, 08:41 PM IST

Cobra: வியட்நாம் கோப்ரா கிராமத்தில் வீட்டுக்கு வீடு ஆயிரக்கணக்கில் நல்ல பாம்புகளை வளர்க்கிறார்கள். சும்மா பார்த்தாலே பயம் வரும் இந்த பாம்புகளை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? 

PREV
15
கோப்ரா சிட்டி

வியட்நாமில் உள்ள வின் சன் கிராமத்திற்குள் நுழைந்தால், ஒவ்வொரு வீட்டிலும் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் பாம்புப் பெட்டிகளைக் கண்டு நாம் மிரண்டு போவது உறுதி. இங்கு வாழும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் முதன்மைத் தொழிலே நல்ல பாம்புகளை வளர்ப்பதுதான். சாதாரண வீடுகளில் கூட 1,000 முதல் 5,000 பாம்புகள் வரை சர்வசாதாரணமாகக் காணப்படுகின்றன. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆபத்தான தொழில் இங்கு பாரம்பரியமாக நடந்து வருவதால், இந்த ஊருக்கு உலகளவில் 'கோப்ரா சிட்டி' என்ற பெயரே வந்துவிட்டது.

25
100 பில்லியன் வருமானம் தரும் பாம்பு

இந்த கிராம மக்களுக்கு நல்ல பாம்புகள்தான் வாழ்வாதாரம். தலைமுறை தலைமுறையாக இவர்கள் பாம்பு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பாம்பின் இறைச்சி, தோல், முட்டை, விஷம் என அனைத்தையும் விற்று நல்ல வருமானம் பார்க்கிறார்கள். 2024-ல், வின் சன் கிராமத்தின் பாம்பு வர்த்தகம் 100 பில்லியன் வியட்நாம் டாங் (சுமார் 4 மில்லியன் டாலர்) அளவுக்கு உயர்ந்துள்ளது.

Fridge: உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் மலை போல் ஐஸ் கட்டியிருக்கா? கரண்ட் பில் எகிறாமல் தடுக்க.. இதோ சிம்பிள் டிப்ஸ்!

35
பாம்பு இனப்பெருக்க முறைகள்

இங்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பாம்பு முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்கப்படுகின்றன. இந்த கிராமத்தின் பொருளாதாரம் இந்த தொழிலைத்தான் நம்பியுள்ளது. காலப்போக்கில், இந்த மக்கள் பாரம்பரிய அறிவை நவீன தொழில்நுட்பங்களுடன் இணைத்துள்ளனர். முன்பு சிறிய அளவில் வளர்த்தவர்கள், இப்போது பெரிய பண்ணைகளை வணிக ரீதியாக நடத்துகின்றனர். இதற்காகவே பிரத்யேக பாம்பு இனப்பெருக்க மையங்களும் இங்குள்ளன.

45
வணிகப் பண்ணைகள்

ஆரோக்கியமான ஆண், பெண் பாம்புகளைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்கிறார்கள். காட்டுப் பாம்புகளை நம்புவதில்லை. பெண் பாம்புகள் இடும் முட்டைகளைப் பாதுகாப்பான வெப்பநிலையில் வைத்து குஞ்சு பொரிக்க வைக்கின்றனர். குட்டிகளைத் தனிப் பெட்டிகளில் வைத்துப் பராமரிக்கிறார்கள். ஆரம்பத்தில் எலி, தவளை கொடுத்தவர்கள், இப்போது கோழிக்கழுத்து போன்ற உணவுகளைக் கொடுக்கிறார்கள். 3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறைதான் பாம்புகளுக்கு உணவு.

55
லாபத்திற்குப் பின்னால் இருக்கும் பெரும் சவால்கள்

பாம்பு வளர்ப்பு லாபகரமானது என்றாலும், இதில் ஆபத்துகளும் அதிகம். விஷப் பாம்புகளைக் கையாள்வது, உணவுச் செலவு அதிகரிப்பது போன்றவை சவால்கள். பாம்புகளுக்கு நோய் பரவினால், மொத்தப் பண்ணையும் பாதிக்கப்பட்டு பெரிய இழப்பு ஏற்படலாம். இது விவசாயிகளுக்கு ஒரு முக்கிய கவலையாக இருந்து வருகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories