குழந்தைகள் சாப்பிட உடனே ஏன் தூங்க வைக்க கூடாது?
- குழந்தைகள் சாப்பிட்டவுடனே தூங்கினால் உணவு செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். மேலும் வயிற்று வலி, வாயு பிரச்சனை, அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர்.
- பெற்றோர்கள் செய்யும் இந்த பழக்கம் தொடர்ந்து நீடித்தால் அது குழந்தைகளுக்கு எடை அதிகரிப்பு, செரிமான பிரச்சினை மற்றும் தூக்கக் கோளாறுக்கு வழிவகுக்கும்.
- சிறிய வயதிலேயே இந்த பழக்கம் இருந்தால், அவர்கள் வளர்ந்த பிறகும் பெரிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.