Why Soap Foam is White: நாம டெய்லி பயன்படுத்துற பொருட்கள்ள சோப்பு ரொம்ப முக்கியம். குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவனு விதவிதமா சோப் யூஸ் பண்றோம். ஆனா, சோப்பு என்ன கலர்ல இருந்தாலும், அதோட நுரை மட்டும் ஏன் வெள்ளையா வருது?
நாம தினமும் குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவனு பலவிதமான சோப்புகளை பயன்படுத்துறோம். சந்தூர் சோப் ஆரஞ்சு நிறத்திலும், டவ் சோப் வெள்ளை, நீல நிறத்திலும், சில சோப்புகள் கருப்பு நிறத்திலும் கூட இருக்கு.
நீல நிற சோப்பு ஏன் நீல நிற நுரையை உருவாக்குவதில்லை?
சோப்போட கலர் முக்கியம் இல்ல, எந்த கலர் சோப் யூஸ் பண்ணாலும் நுரை வெள்ளையா தான் வரும். ஏன் இப்படின்னு யோசிச்சிருக்கீங்களா? டிடர்ஜென்ட் சோப் நீல நிறத்துல இருக்கும்போது, துணி துவைக்கிறப்ப நுரை ஏன் நீலமா வர்றதில்ல? உங்க மனசுல இப்போ இந்த கேள்வி வந்திருக்கும். வாங்க, அதுக்கான காரணத்தை தெரிஞ்சுக்கலாம்.
உண்மையில, ஒரு பொருள் ஒளியோட எல்லா நிறங்களையும் தனக்குள்ள இழுத்துக்கும்போது அது கருப்பா தெரியும். அதே சமயம், ஒரு பொருள் ஒளியோட எல்லா நிறங்களையும் பிரதிபலிச்சா, அது வெள்ளையா தெரியும். இதுதான் அடிப்படை அறிவியல்.
சோப்பு நுரை வெள்ளையா தெரியுறதுக்கு காரணம், அது ஒளியை சிதறடிக்கிற விதம் தான். ஒரு பொருள் மேல ஒளி படும்போது, அது ஒளியை உள்ளிழுக்கலாம், வந்த திசையிலயே திருப்பி அனுப்பலாம், அல்லது எல்லா திசைகளிலும் சிதறடிக்கலாம். சோப்பு நுரைகள்ல இருக்கிற கோடிக்கணக்கான சின்ன சின்ன குமிழிகள், ஒளியோட எல்லா நிறங்களையும் எல்லா திசைகளிலும் சிதறடிக்குது. இதனாலதான் சோப்பு என்ன கலர்ல இருந்தாலும், நுரை மட்டும் வெள்ளையா தெரியுது.
அனைத்து வண்ண அலைநீளங்களும் சமமான அளவில் சிதறடிக்கப்பட்டு மீண்டும் நம் கண்களை வந்தடைவதால், அந்த ஒளியை நம் மூளை வெள்ளை நிறமாகவே உணர்கிறது. கடல் அலை, பனி மற்றும் மேகங்கள் வெள்ளையாகத் தெரிவதற்கும் இதே ஒளிச்சிதறல் தான் காரணம்.
உதாரணம்: ஒரு பெரிய பச்சை நிறக் கண்ணாடி பாட்டிலை உடைத்து மிகச் சிறிய துகள்களாக மாற்றினால், அந்தத் தூள் பச்சை நிறமாக இருக்காது, வெள்ளையாக தெரியும். அதே தத்துவம்தான் இங்கும் செயல்படுகிறது.
சோப்பைப் பயன்படுத்தும் போது உருவாகும் நுரை, நிறைய காற்றுக்குமிழிகளின் தொகுப்பு . இந்த ஒவ்வொரு குமிழியும் மிக மிக மெல்லிய சோப்பு நீர் படலத்தால்ஆனவை. சோப்பில் கலந்திருக்கும் வண்ணம் இந்த மெல்லிய படலத்தில் பரவும் போது, அதன் அடர்த்தி மிக மிகக் குறைந்து, கிட்டத்தட்ட நிறமற்றதாக மாறிவிடுகிறது.
சோப்பு கட்டியாகஇருக்கும் போது, அதன் மூலக்கூறுகள் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கும். இதனால் சாயம் அதிக செறிவோடு தெரிவதால் சோப்பு வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது. சோப்பைத் தேய்க்கும்போது, மிகக் குறைந்த அளவிலான சோப்புடன் அதிகப்படியான நீரும் காற்றும் கலக்கின்றன.குமிழிகளின் சுவர்கள் வெறும் சில நேனோமீட்டர் தடிமன் கொண்ட மிக மிக மெல்லிய நீர்மப் படலத்தால் ஆனவை. இந்த மெல்லிய பரப்பில் உள்ள சாயத்தின் அளவு மிக மிகக் குறைவு என்பதால், அது ஒளியை உறிஞ்சி தன் நிறத்தைக் காட்டுவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.