பாலம் எண்- 541, இமாச்சல பிரதேசம்:
கட்டுமானம் முடிந்தது: 1898, நீளம்: 174 அடி
கானோ ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள பாலம் எண் - 541 ஆனது நம் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பிரபலமானது. பிரிட்டிஷ் காலத்தில் கல்கா - சிம்லா ரயில் பாதையில் நிறைய பாலங்கள் கட்டப்பட்டிருந்தாலும், பாலம் எண் - 541 இன் அழகு 124 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே அழகுடன் இருப்பதை பார்த்தாலே புரியும். நான்கு மாடி ஆர்ச் கேலரி போல கட்டப்பட்ட இந்த பாலம், அந்த கால கட்டத்தில் செங்கல் மற்றும் மோட்டார் கொண்டு கட்டப்பட்டது. இன்றும், அதில் ரயில் இயக்கப்படுகிறது. உலகின் மிக உயரமான வளைவு பாலம் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.