
சமய நூல்களில், நாம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த விதிகளைப் பின்பற்றினால், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் கிடைக்கும். இந்த விதிகளை மீறினால், வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என பல்வேறு கருத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இரவில் நகங்களை வெட்டக்கூடாது, வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் தலைக்கு குளிக்கக்கூடாது மற்றும் முடி வெட்டக்கூடாது என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதுபோலவே, உணவு உட்கொள்வதைப் பற்றியும் பல செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எந்தக் கடவுளை வழிபட்டாலும், வணங்காவிட்டாலும் முடியை அவிழ்த்துக்கொண்டு கோயிலுக்குச் செல்லக்கூடாது என்பது பெரியோரின் வாக்கு. உறங்கச் செல்லும் முன் முடியைக் கட்ட வேண்டும் என்கிற விதியும் சாஸ்திரத்தில் உண்டு. ஆனால் இதே கருத்து அறிவியல் ஆதாரங்களுடனும் விஞ்ஞானிகள் பலர் வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், இரவில் தூங்கும் முன் பெண்கள் ஏன் தலைமுடியை அவிழ்த்துக் கொண்டு தூங்கக்கூடாது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சோகத்தின் அடையாளம்
முன்பெல்லாம் பெண்கள் நீண்ட ஜடையுடன் விழாக்களுக்கு செல்வார்கள். அப்போது நீளமான பின்னல் தான் நாகரீகமாக இருந்தது. ஆனால் இப்போது முடியை வளர வளர வெட்டுவது தான் ஃபேஷன். பெரும்பாலான பெண்கள் முடியை முடிந்துக்கொள்வது கிடையாது. பார்ட்டிக்கு போகும் போது தலையை விரித்துப் போட்டுக்கொண்டு செல்வார்கள். அதேபோன்று இரவில் தூங்கும் போது முடியை அவிழ்த்துவிட்டு தூங்குவார்கள். அப்படி தூங்கினால் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். நேர்மறையான தாக்கம் எதுவும் நடக்காது.தலைமுடியைக் கீழே போட்டுக்கொண்டு தூங்குவது சோகத்தின் அடையாளம் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
ஹோம்சிக் கொண்ட நபரா நீங்கள்..? அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள்..!!
எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
இரவில் பெரும்பாலும் எதிர்மறையான ஆற்றல் செயல்படுவதாக நம்பப்படுகிறது. அந்தநேரத்தில் பெண்கள் தங்களுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு தூங்குவது என்பது, அவர்கள் மீது எதிர்மறை ஆற்றல் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தில் இருப்பது கோபத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மன அழுத்தம் தோன்றுகிறது. வாழ்க்கையில் நிம்மதி இருக்காது.
குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும்
ஜோதிட சாஸ்திரப்படி பெண்கள் இரவில் முடியை அவிழ்த்து வைத்து தூங்கினால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வரும். அத்தகைய பெண்களின் வீட்டில் குடும்ப முரண்பாடுகள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. குடும்ப உறுப்பினர்களிடையே மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கருப்பு நிறம் என்பது சனியின் நிறம். கருப்பு முடியை அவிழ்த்து உறங்குவது சனி தோஷத்தை உண்டாக்கும் எனவும் ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு மழைக்கால நோய் பாதிப்பு வாரமல் தடுக்க இதைச் செய்யுங்க..!!
சில அறிவியல் காரணங்களும் உள்ளன
இதுவரை சாஸ்திரங்களில் வலியுறுத்தப்பட்டுள்ள செய்திகளை தெரிந்துகொண்டோம். ஆனால் பெண்கள் தலைமுடியை அவிழ்த்துவிட்டு உறங்குவதற்கு அறிவியல்பூர்வமாகவும் சில எதிர்மறையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இரவில் கழுத்து உருளுவதால் தலையணையில் முடி சிக்கிக் கொள்கிறது. இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். இதனால் முடி பலவீனமாகிறது. இரவில் முடியை அவிழ்த்து தூங்குவது தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்தும். பல நேரங்களில் முகத்தில் முடி உறக்கத்தைக் கெடுக்கும். மேலும், முகத்தில் வரும் முடியில் பொடுகுத் தொல்லையால் சருமப் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது மட்டுமின்றி இரவில் முடியை அவிழ்த்து தூங்குவது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.