தீராத கடன் பிரச்சனை உங்களை ஆட்டி படைக்குதா? அப்படினா..வீட்டில் இந்த 5 வாஸ்து விதிகளை பின்பற்ற மறக்க வேண்டாம்.!

First Published Sep 28, 2022, 9:57 AM IST

Tips to Fix Vastu Problems in Your Home: வீட்டில் எப்போதும் தீராத பண பிரச்சனை, குடும்பத்தில் சண்டை, வறுமை, போன்ற பிரச்சனைகள் உங்களை ஆட்டி படைக்குது என்றால் அதற்கு வாஸ்து ஒரு குறைபாடாக இருக்கலாம். எனவே, வாஸ்து முறைப்படி வீட்டில் இவற்றை தவிர்த்தல் நல்லது.

வாஸ்து என்பது பண்டைய இந்திய வாழ்வியல் அறிவுத்துறைகளில் ஒன்றாகும்.   வீடோ, தொழிற்சாலையோ அல்லது ஒரு நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் மொத்தம் வாஸ்து முறைப்படி மொத்தம் 8 திசைகள் உள்ளன. ஒவ்வொரு திசைக்கும் ஒரு சிறப்பு உண்டு. வீட்டை பொறுத்தவரை வீட்டில் வாழும் மக்களின் ஆரோக்கியம், செல்வம், தொலைத்தொடர்பு ஆகியவற்றில் தொடர்பு  கொண்டது. ஆம், அப்படியாக வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு நிறைந்திருக்க நாம் வீட்டில் செய்ய வேண்டிய அத்தியாவசிய வாஸ்து சாஸ்திர விதிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் துல்லிய பலன்..மிதுனம், கும்பம் ராசிக்கு வாழ்வில் வெற்றி உண்டு...உங்கள் ராசிக்கு என்ன பலன்?

Vastu tips for home:

வீட்டின் கதவுகள்:

உங்கள் சொந்த வீடு, வாடகை வீடு,  அபார்ட்மெண்ட் மற்றும் அலுவலம் என எதுவாக இருந்தாலும் அறையின் பிரதான கதவு அல்லது நுழைவாயில் கதவு, மற்ற எல்லா கதவுகளிலும் பெரியதாக இருக்க வேண்டும்.  இதேபோல், இடத்தின் மற்ற எல்லா கதவுகளையும் விட இது அகலமாகவும், உயரமாகவும் இருக்க வேண்டும்.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் துல்லிய பலன்..மிதுனம், கும்பம் ராசிக்கு வாழ்வில் வெற்றி உண்டு...உங்கள் ராசிக்கு என்ன பலன்?

கழிவறை மற்றும் சமையலறை வடகிழக்கு, தென்மேற்கு மற்றும் மையத்தில் இருக்கக்கூடாது

எந்தவொரு கட்டிடத்தின் தென்மேற்கு திசை மனிதனின் முதுகெலும்பாகவும், வடகிழக்கு தலையாகவும் கருதப்படுகிறது. இந்த திசையில் வீட்டின் கழிப்பறை அல்லது சமையலறை இருப்பது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நெருங்கிய உறவுகளுக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தும். 

Vastu tips for home:

 பிரதான கதவுக்கு மேல் கழிப்பறை இருக்கக்கூடாது

 வீட்டின் பிரதான கதவு அல்லது நுழைவாயில் கதவுக்கு மேலே எந்த கழிப்பறையும் இருக்கக்கூடாது. ஏனெனில், வீட்டின் நுழைவாயில் கதவு, மனித வாய் போன்றது. சுற்றுப்புறத்திலிருந்து வரும் பாஸிட்டிவ்  சக்தி பிரதான கதவு வழியாக வீட்டிற்குள் நுழைகிறது. வீட்டில் செல்வத்தை அள்ளி தரும், மகாலட்சுமி இந்த கதவின் வழியாக வீட்டில் நுழைகிறார். அதேபோன்று, நீங்கள் வீட்டில் எந்த பூஜை செய்தாலும், கதவை திறந்து வைத்து செய்ய வேண்டும். அப்போது தான் தெய்வத்தின் அருள் கிடைக்கும். ஆனால், பல அடுக்கு மாடி குடியிருப்புகளில், இந்த வாஸ்து குறைபாட்டை பெரும்பாலானோர் கவனிக்க மறந்துவிடுவதுண்டு.எனவே, இனிமேல் நீங்கள் இந்த குறைபாட்டை சரி பார்த்து கொள்ளுங்கள்.

வடக்கு நோக்கி தலை வைத்து தூங்காதீர்கள்

நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை தெற்கு, அல்லது கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்க வேண்டும். அது ஒருபோதும் வடக்கு நோக்கி தலை வைத்து தூங்க கூடாது. இது வாஸ்துவின் மிக முக்கியமான கோட்பாடுகளில் ஒன்றாகும். ஏனென்றால், இதற்குப் பின்னால் ஒரு மிக முக்கியமான ஆரோக்கியக் காரணம் உள்ளது. நமது உடல் ஒரு சிறிய காந்தம் போன்றது. ஆம், நமது தலை வடக்கு மற்றும் கால்கள் தெற்கு நோக்கி வைத்து உறங்கும் போது, ​​நமது உடலின் காந்தப்புலம் பூமியின் காந்தப்புலத்தை விரட்டி தூக்கம் மற்றும் நிலையற்ற எண்ணங்களை உண்டாக்குகிறது.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் துல்லிய பலன்..மிதுனம், கும்பம் ராசிக்கு வாழ்வில் வெற்றி உண்டு...உங்கள் ராசிக்கு என்ன பலன்?

Vastu tips for home:

 தூங்குவதற்கு எந்த திசை நல்லது:

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் தூங்கும் போது தலையை தெற்கு நோக்கியும், கால்களை வடக்கு நோக்கி தூங்குவது சிறந்தது என்று  பரிந்துரைக்கப்படுகிறது. இதனால், ஒருவரின் அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும். மேலும், ஒருவர் புகழ்,வெற்றி போன்ற செல்வத்தை  பெருகுவதற்கு இந்த திசை சிறந்த திசையாகும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பாக, இதனால், கணவன் -மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். 
 

click me!