ஆனால், இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், பேஷன் உலகில் மூழ்கி போய் விட்டோம். இதனால், தலையில் பூ சூடி கொள்வது, நெற்றியில் குங்குமம் இடுவது ஓல்டு பேஷன் ஆகி விட்டது. இப்போது எல்லாம் பெண்கள் யாரும் தலையில் பூ சூடிக் கொள்வதே இல்லை. ஏன் தலைமுடியை பின்னுவது கூட இல்லை. லூஸ் கேர் பேஷன்னாக மாறிப்போய் விட்டது.
தலையில் பூ வைப்பதென்றால் பின் மண்டை கழுத்து அருகே தான் வைக்க வேண்டும். ஏனென்றால் அங்கு தான் கூம்பு சுரப்பி (Pineal gland) இருக்கிறது.இது நாம் தலையில் பூ வைக்கும் போது அந்த பூவின் மனமானது, இந்த சுரப்பியின் வழியாக நம் உடலுக்குள் சென்று நம் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும், வைத்திருக்கும்.
ஆகையால் தான் பெரியவர்கள் பெண்கள் கட்டாயமாக தலையில் பூ சூடிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். இது பெண்களின் மன உளைச்சலை பெருமளவு குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இது அறிவியல் பூர்வமான உண்மை.