இதனால், நீண்ட நாள் மன அழுத்தம் மற்றும் மன ரீதியான நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே, இது போன்ற சமயங்களில் அந்த பெண்களை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தையை இழந்த பெண்களுக்கு தோன்றும் மனச்சோர்வின் அறிகுறிகள்:
நம்பிக்கையற்றதாக உணர்வது, எடை இழப்பு, பசியின்மை, ஒழுங்கற்ற தூக்க முறைகள், ஓய்வின்மை, தேவையற்ற குற்ற உணர்வு, பிடித்த செயல்களில் ஆர்வம் இல்லாமை மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்றவை மனச்சோர்வின் அறிகுறிகள் ஆகும்.