செய்முறை
முன்னதாக இறாலை நன்கு கழுவி சுத்தமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள இறாலை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் இட்டு ஓரளவுக்கு அரைத்து எடுத்து, அதனை தனியாக வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.