குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்!
வெட்கம் அதிகம் கொண்ட அல்லது பயந்த சுபாவம் உள்ள குழந்தைகளிடம் அடிக்கடி அதை குறித்து சொல்லி காட்டாதீர்கள். அப்படி சொல்வதால் அது அவர்கள் வாழ்நாள் முழுக்க தொடரலாம். என் பிள்ளை பேசவே பேசாது, என் மகள் வெளியே போய் பழகமாட்டாள், இவன் பயந்துக்கிட்டு தான் இருப்பான் போன்ற விஷயங்களை சொல்வதை நிறுத்துங்கள். அதையே அவர்கள் பின்பற்ற தொடங்கலாம். வீட்டிற்கு வருபவர்களுடன் குழந்தைகள் பேச தயங்கினால் அவர்களுக்கு உதவுங்கள்.
உறவினர்களுடன் பேசவில்லை என்பதால் குழந்தைகளை திட்டாதீர்கள். நீங்களே உரையாடலை தொடக்கி வையுங்கள். குழந்தைகள் சொல்ல வருவதை காது கொடுத்து கேளுங்கள். நீங்களாகவே அவர்களைக் குறித்து முடிவு செய்யாதீர்கள். நீங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடாவிட்டால் அவர்கள் பயந்த சுபாவத்துடனும், பழகுவதற்கு வெட்கப்படும் குழந்தைகளாகவும் வளர வாய்ப்புள்ளது.