ஒரு வாரம் ஆனாலும், நீங்கள் கட்டி வைத்த மல்லிகை பூ ஃபிரஷாக இருக்க..இப்படி ஒருமுறை ஸ்டோர் செய்து வையுங்கள்..

First Published Sep 25, 2022, 1:59 PM IST

Poo vadamal irukka: பூக்களை ஒரு வாரம் ஆனாலும், உதிராமல் ஃபிரஷாக செடியில் பறித்த மல்லிகை போன்று வைத்திருக்க தேவையான உதவி குறிப்புகள் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

பூக்கள் என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். என்னதான் விதவிதமான பொருட்கள் வாங்கி, பெண்கள் தங்களை அலங்கரித்து கொண்டாலும்,  பூவும், குங்குமமும் வைத்த பிறகே அவர்களின் அழகு முழுமை பெரும். பூக்கள் மங்களத்தின் அடையாளமான ஒன்றாகும். 

மேலும் படிக்க...Dragon Fruit: வாரம் ஒருமுறை டிராகன் பழம் சாப்பிட்டால்..உடலில் இவ்வளவு ஆரோக்கிய மாற்றம் வருமா..?

Jasmin Flower

இதனால் தான்,பூக்கள்  திருமணங்கள், பூஜைகள் போன்ற மங்கள காரியங்களுக்கு பயன்படுகிறது. நாம் சந்தையில் வாங்கி வாரத்தில் ஒரு நாள் கட்டி வைத்து, தினம் தினம் பூஜைக்கும், அணிந்து கொள்வதற்கும் பயன்படுத்துவது உண்டு. பொதுவாக விழாக்கள், பண்டிகை நாட்கள் வரும்போது, மொத்தமாக வாங்கி கட்டி வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க...Dragon Fruit: வாரம் ஒருமுறை டிராகன் பழம் சாப்பிட்டால்..உடலில் இவ்வளவு ஆரோக்கிய மாற்றம் வருமா..?

அப்படி பபூக்களை ஒரு வாரம் ஆனாலும், உதிராமல் ஃபிரஷாக செடியில் பறித்த மல்லிகை போன்று வைத்திருக்க தேவையான உதவி குறிப்புகள் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்

அதற்கு நீங்கள் கடைக்கு சென்று, நல்ல மொட்டாக இருக்கும் பூவை வாங்கி வைத்து கொள்ளுங்கள். பிறகு, பூக்களை வாங்கி வந்த பிறகு பூவை கொடுத்திருக்கும் கவரில் இருந்து எடுத்து, ஒரு பேப்பரில் கொட்டி  பத்து நிமிடம் ஆறவிடுங்கள்.

பிறகு பூக்கள் மொட்டாக இருக்கும் போதே கட்டி விடுங்கள், அழகாக பூக்களை, பூ போல் எடுத்து கட்ட வேண்டும். ஆம், பூக்களை கட்டும் போதும் பூக்களை கசக்கி, காம்புகளை உடைத்து விடாமல், கவனமாக கட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

பிறகு, ஒரு பெரிய சில்வர் டப்பா எடுத்துக் கொள்ளுங்கள். அதின் அடியில் ஒரு பேப்பரை போட்டு, கட்டிய பூக்களை அதில் வையுங்கள், பூக்களுக்கு இடையிடையில் சிறு, சிறு துண்டு பேப்பர் களை வைத்து விடுங்கள். அதாவது பூக்களை சுற்றும் போது, ஓவ்வொரு அடுக்கிற்கும் இடையில் பேப்பர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு பூக்களுக்கு மேலே ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து விட்டு, டப்பாவை மூடி பிரிட்ஜில் ஸ்டோர் செய்து விடுங்கள். இதே போல் வாழை இலையும் சுற்றி வைக்கலாம் அல்லது மெலிதான காட்டன் துணிகளையும் சுற்றி வைக்கலாம். இனி நீங்க எப்ப பூ வாங்கினாலும் இப்படி வாங்கி சேமித்து வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் பூ வாடாமல் இருக்கும்.

பின் குறிப்பு: பூவை ஆற வைக்கும் போது பேன் காற்றில் ஆற வைத்தால் பூ கறுத்து போய் விடும். எனவே, வீட்டின் நிழலில் காய விடுங்கள்.

மேலும் படிக்க...Dragon Fruit: வாரம் ஒருமுறை டிராகன் பழம் சாப்பிட்டால்..உடலில் இவ்வளவு ஆரோக்கிய மாற்றம் வருமா..?

click me!