நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஹேர் மாஸ்க்கில் பீட்ரூட் சாற்றைக் கலந்து பயன்படுத்தினால், உங்கள் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் அல்லது மருதாணியுடன் பீட்ரூட் சாற்றைக் கலந்து, 30 முதல் 45 நிமிடங்கள் வரை தலையில் வைத்திருந்து, பின்னர் மைல்டான ஷாம்பு கொண்டு முடியை அலசவும்.
ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள், நீங்கள் முதல் முறையாக பீட்ரூட்டைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம். ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பீட்ரூட் சாறு நரை முடியை முழுமையாக கருப்பாக்காது, ஒரு நிறத்தை மட்டுமே கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.