Sukran Peyarchi: இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் யோகம், உங்கள் ராசி என்ன.?

First Published Sep 22, 2022, 6:02 AM IST

Sukran Peyarchi 2022 Palangal: சுக்கிரனின் சஞ்சாரத்தால், இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம், புகழ், மகிழ்ச்சி போன்றவை நிறைந்ததாக இருக்கும். அந்த அதிர்ஷ்டம் நிறைந்த ராசிகள் யார் என்பதை பார்ப்போம்.
 

ஜோதிடத்தின் பார்வையில், சுக்கிரன் கிரகம், ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல் மற்றும் செழுமை ஆகியவற்றின் காரன கிரகம் கருதப்படுகிறது. சுக்கிரன் கிரகம் செப்டம்பர் 24 அன்று கன்னி ராசியில் நுழையவுள்ளார்.  சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் நேரத்தில் ஏற்கனவே அந்த ராசியில் புதன் மற்றும் சூரியனும் இந்த ராசியில் இருப்பார்கள்.  கிரகபங்களின் இந்த சிறப்பு நிலை அனைத்து 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு பணமும் மரியாதையும் கிடைக்கும். பல இடங்களிலிருந்து பண ஆதாயம் கிடைக்கும். இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். சமூகத்தில் அவர்களின் மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

 மேலும் படிக்க...Sevvai Peyarchi 2022: செவ்வாய் பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு அக்டோபர் 16ம் தேதி வரை சிறப்பு அருள் கிடைக்கும்

மிதுனம்:

சுக்கிரனின் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பண ஆதாயத்தை உண்டாக்கும். இவர்களின் வாழ்வில் எந்த பிரச்சனை இருந்தாலும், அவை அனைத்தும் அகன்று நிம்மதி கிடைக்கப் போகிறது. பெரும் லாபம் ஈட்டுவார்கள். நல்ல பண ஆதாயம் உண்டாகும். இந்த காலத்தில் வாகனம் மற்றும் சொத்து வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பச் சூழல் இனிமையாகவும், சுகமாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.

 மேலும் படிக்க...Sevvai Peyarchi 2022: செவ்வாய் பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு அக்டோபர் 16ம் தேதி வரை சிறப்பு அருள் கிடைக்கும்

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். சொந்த தொழில் செய்யும் கன்னி  ராசிக்காரர்களுக்கு வியாபாரம் அதிகரிக்கும். முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், இந்த காலத்தில் சிறப்பாக இருக்கும். உங்களின் பழைய முதலீடுகளும் பெரிய லாபம் தரும். வியாபாரம் பெருகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மீக ரீதியாக நல்ல பலன் உண்டாகும். 

 மேலும் படிக்க...Sevvai Peyarchi 2022: செவ்வாய் பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு அக்டோபர் 16ம் தேதி வரை சிறப்பு அருள் கிடைக்கும்

click me!