Lunch time: மதிய நேரத்தில் மறந்தும் கூட சாப்பிட கூடாத உணவுகள்..சாப்பிட்டால் என்ன பிரச்சனை..?

First Published Oct 3, 2022, 7:02 AM IST

Dont Eat these Foods on lunch time: சில உணவுகளை மதிய நேரத்தில் எடுத்துக்கொள்வதால் இயல்பை விட அதிக உணவை உட்கொள்ள தூண்டுவதுடன், உடல் நலனையும் கெடுக்கிறது. 

காலை, இரவு நேரத்தை விட மதிய நேரத்தில் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறோம். எனவே, சாப்பிட கூடிய மதிய உணவை நாம் சரியான முறையில் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இல்லையேல் செரிமானத்தில் பாதிப்பு, ஜீரண கோளாறு போன்ற உடல்  பாதிப்புகள் ஏற்படும். அந்த வகையில்,  எந்தெந்த உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துவைத்துக் கொள்வோம்.

மேலும் படிக்க...Uric Acid: உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த...சாப்பிட வேண்டிய பழங்கள் இவைகள்தான்..மிஸ் பண்ண வேண்டாம்..!

நூடுல்ஸ், பாஸ்தா:

சுவையாக உள்ளதே என்பதற்காக பாஸ்தா, நூடுல்ஸ் முதலியவற்றை மதிய நேரத்தில் சாப்பிடாதீர்கள். இதில் உள்ள அதிக கார்பஸ் உடல் எடையை அதிகரிக்கும்.இது உங்களின் உடல் ஆரோக்கியதிற்கு தீங்கு விளைவிக்கும்.  செரிமான கோளாறு ஏற்படும்.

 ஜூஸ் :

ஜூஸ் குடிப்பது ஆரோக்கியமானது என்றாலும், தவறான நேரத்தில், தவறான விதத்தில் எடுத்துக் கொள்வது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும். ஆம், பசியை அதிகரிக்கும். வறுத்த பொறித்த உணவுகளை சாப்பிட தூண்டும். இது சில நேரம் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

மேலும் படிக்க...Uric Acid: உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த...சாப்பிட வேண்டிய பழங்கள் இவைகள்தான்..மிஸ் பண்ண வேண்டாம்..!

பர்கர்:

பர்கர், பீட்சா, சான்விட்ச் போன்ற பாஸ்ட் புட் உணவுகள் மதிய நேரத்தில் சாப்பிட்டால் கொழுப்பு சத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை உண்டாக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். அத்துடன் மலச்சிக்கலையும் இந்த உணவுகள் உண்டாக்கும். எனவே அதிகம் கொழுப்பு சத்து கொண்ட உணவுகளை தவிருங்கள். முடிந்த அளவிற்கு நார்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.

மேலும் படிக்க...Uric Acid: உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த...சாப்பிட வேண்டிய பழங்கள் இவைகள்தான்..மிஸ் பண்ண வேண்டாம்..!

சூப்:

இன்றைய காலத்தில் காபி, டீக்கு அடுத்தபடியாக, சூப் குடிக்கும் பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது.  சாப்பாட்டுக்கு முன் பசியை அதிகரிக்க சூப் குடிப்பது, மாலை வேளையில் ஆரோக்கிய பானமாக சூப் அருந்துவது என இந்தப் பழக்கம் பலவிதமாகப் பின்பற்றப்படுகிறது. ஆனால், மதிய வேளையில் சூப் குடிப்பது பசியை அதிகரிக்கும். அதிகம் சாப்பிட தூண்டும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மதிய வேளையில் சூப் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

click me!