நூடுல்ஸ், பாஸ்தா:
சுவையாக உள்ளதே என்பதற்காக பாஸ்தா, நூடுல்ஸ் முதலியவற்றை மதிய நேரத்தில் சாப்பிடாதீர்கள். இதில் உள்ள அதிக கார்பஸ் உடல் எடையை அதிகரிக்கும்.இது உங்களின் உடல் ஆரோக்கியதிற்கு தீங்கு விளைவிக்கும். செரிமான கோளாறு ஏற்படும்.
சூப்:
இன்றைய காலத்தில் காபி, டீக்கு அடுத்தபடியாக, சூப் குடிக்கும் பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சாப்பாட்டுக்கு முன் பசியை அதிகரிக்க சூப் குடிப்பது, மாலை வேளையில் ஆரோக்கிய பானமாக சூப் அருந்துவது என இந்தப் பழக்கம் பலவிதமாகப் பின்பற்றப்படுகிறது. ஆனால், மதிய வேளையில் சூப் குடிப்பது பசியை அதிகரிக்கும். அதிகம் சாப்பிட தூண்டும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மதிய வேளையில் சூப் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.