Vastu Tips: வீட்டில் இந்த பொருட்களை மறந்தும் கூட வைக்க வேண்டாம்..! மீறினால் தரித்திரம் வந்து சேருமாம்...

First Published Sep 7, 2022, 9:13 AM IST

Vastu Tips: நம்முடைய வீட்டில், தரித்திரம் வந்து சேருவதற்கு வீட்டில்  தெரியாமல் நாம் வைத்திருக்க கூடிய சில பொருட்கள் முக்கிய காரணமாக இருக்கிறது.

Vastu Tips

நமது முன்னோர்கள் வழி வழியாக, எல்லா செயல்களுக்கும் குறிப்பிட்ட சில வாஸ்து, சாஸ்திரம் பின்பற்றி வந்தனர். நாளடைவில் அது மருவி பல்வேறு விதமாக கடைப்பிடப்படுகிறது. இன்றைய சூழலில் வீட்டில் சிறிது பிரச்சனை ஏற்பட்டாலும் அடுத்து என்ன செய்வது? என்பதை அறிய பெரும்பாலான மக்கள் தற்போது ஜோதிடத்தை  தான் நம்பியுள்ளனர். அதன்படி, சில வாஸ்து, சாஸ்திரங்களை பின்பற்றினால் எல்லாம் சரியாகி விடும் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்க...Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை துல்லிய கணிப்பு..இந்த ராசிகளுக்கு கிரக நிலை சாதகமாக இருக்கும்..

Vastu Tips

அப்படியாக வாஸ்து சாஸ்திர படி,  நம்முடைய வீடுகளில் பிரச்சனைகள் வருவதற்கு  தெரியாமல் கூட நம்முடைய வீடுகளில் வைத்திருக்கும் பொருட்கள் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த பொருட்கள் தரித்திரத்தையும், எதிர்மறை ஆற்றல்களையும் வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கும். அப்படியான பொருட்களை வீட்டில் வைத்திருக்காமல், உடனே தூக்கி எறிந்து விட் வேண்டும்..அப்படியான ஐந்து பொருட்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மேலும் படிக்க...Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை துல்லிய கணிப்பு..இந்த ராசிகளுக்கு கிரக நிலை சாதகமாக இருக்கும்..

Vastu Tips

தேய்ந்து போன துடைப்பம்:

துடைப்பத்தை எப்பொழுதும் மகாலட்சுமிக்கு இணையாக கூறப்படுவது வழக்கம். அத்தகைய துடைப்பம் தேய தேய வீட்டில் வருமானம் தேயும் என்கிற ஒரு சாஸ்திரமும் உண்டு. எனவே, வாஸ்து ரீதியாகவும் தேய்ந்த மற்றும் பயன்படாத துடைப்பங்களை வீட்டில் சேர்க்கக்கூடாது.  அவற்றை அப்படியே மூலையிலும், பரண் மேலும் போட்டு வைப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கும். மேலும், வீட்டில் பல்வேறு பிரச்சனைகள், பண கஷ்டம் ஏற்படும். 

Vastu Tips

காய்ந்த செடிகள்:

உங்கள் வீட்டில் நீங்கள் ஆசையாக வாங்கி வைக்கும் செடி துளிர்விடாமல் காய்ந்து போய் விட்டால் அதனை அப்படியே வைத்திருக்காமல் அப்புறப்படுத்திவிடுவது நல்லது. இல்லையென்றால் அது வீட்டை சுற்றிலும் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். இதனால் நிறைய தொழில் பிரச்சினைகளும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். அதுமட்டுமின்று, இரும்பு பொருட்கள், பழைய சுவாமி படங்கள், கிழிந்து போன துணிமணிகள், ஓட்டை உடைசல்கள் என்று நமக்கு பயன்படாத எந்த ஒரு பொருளையும், குப்பையில் தூக்கி எரிந்தால், வீட்டில் மகாலட்சுமி கடாட்சமாக இருக்கும், கண்டிப்பாக இல்லத்தில் தரித்திரம் நீங்கி செல்வ வளம் கூடும்.

Vastu Tips

உடைந்த கண்ணாடி:
 
இரண்டாவது வீட்டில் உடைந்த கண்ணாடி வைத்திருக்கக் கூடாது.  ஓடாத கடிகாரம் வீட்டில் இருந்தால் அது எதிர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும். இதனால் நிறைய கடன் பிரச்சினைகளும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். எனவே, உடைந்த கண்ணாடியை வீட்டில் அழகு பொருளாக மாற்றி வைக்க கூடாது. அதனை அப்புற படுத்துவது சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

Vastu Tips

தேவையற்ற செருப்புகள்:

முதலாவதாக நாம் பார்க்க கூடிய தரித்திரத்தை உண்டாக்கக்கூடிய முக்கியமான பொருள் தேவையற்ற செருப்புகள் ஆகும். இந்த செருப்புகள் நாம் வெளியில் செல்லும் போது, பல கெட்ட விஷயங்களை மிதித்து நடந்து கொண்டிருக்கும். எனவே, செருப்புகள் எப்போதும் வீட்டிற்குள் வைக்க கூடாது. அதேபோன்று, இந்த செருப்புகள் தேவையில்லாமல் பயன்படாத நிலையில் நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. இது எதிர்மறை ஆற்றல்களை வெளியிடக்கூடிய தன்மை கொண்டதாக இருப்பதால் உங்களுக்கு வாழ்வில் பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கும். 

மேலும் படிக்க...Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை துல்லிய கணிப்பு..இந்த ராசிகளுக்கு கிரக நிலை சாதகமாக இருக்கும்..

click me!