அமாவாசை நாளான இன்று இந்த முறைப்படி திருஷ்டி கழித்தால்..வீட்டில் உள்ள கெட்ட சக்தி, கண் திருஷ்டி நீங்கும்..

First Published Aug 26, 2022, 1:53 PM IST

Amavasai thrushti: அமாவாசை நாளில், கெட்ட சக்திகளை ஒழித்து, பீடை நீங்க  நம்முடைய முன்னோர்களால் செய்து வந்த பரிகாரங்கள் சிலவற்றை பார்க்கலாம்.  

Amavasai thirusti:

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து விரதமிருந்து வழிபடுவது சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன்படி, இன்று அமாவாசை. இன்றைய தினத்தில் உங்கள் பித்ருகளுக்கு திதி கொடுக்கும் பொழுது, ஏழைகளுக்கு உணவு, ஆடை, மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பு ஆகும். அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்வதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 

மேலும் படிக்க..இயற்கை முறையில் கொசுவை ஓட ஓட விரட்ட இதை ட்ரை பண்ணுங்கோ...உங்கள் பணமும் மிச்சம், ஆரோக்கியத்திற்கும் 100% நல்லது

Amavasai thirusti:

இந்த அம்மாவாசை நாளில் நம்முடைய வீட்டில் இருப்பவர்களுக்கு கண் திருஷ்டி கழிக்கவும் மறக்க கூடாது. மாதம் ஒருமுறை வரக்கூடிய அமாவாசை நாளில், கெட்ட சக்திகளை ஒழித்து, பீடை நீங்க  நம்முடைய முன்னோர்களால் செய்து வந்த பரிகாரங்கள் சிலவற்றை பார்க்கலாம்.  
 

Latest Videos


Amavasai thirusti:

இன்று மாலை நீங்கள் குளித்து விட்டு, பூஜை செய்யும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அந்த எலுமிச்சம் பழத்தில் ஒரு பக்கம் மஞ்சள், ஒரு பக்கம் குங்குமம் தடவி நிலை வாசலில் இரண்டு பக்கமும் வைக்க வேண்டும். பிறகு வழக்கம் போல உங்களுடைய அமாவாசை பூஜையை செய்து முடிக்கலாம். அமாவாசை இரவு முழுவதும் அது நிலை வாசலில் அப்படியே இருக்க வேண்டும். ஏனெனில், அது உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை எதிர்மறை ஆற்றலையும் ஈர்த்து வைத்திருக்கும். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளில் இதே போன்று பூஜை பரிகாரங்களை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க..இயற்கை முறையில் கொசுவை ஓட ஓட விரட்ட இதை ட்ரை பண்ணுங்கோ...உங்கள் பணமும் மிச்சம், ஆரோக்கியத்திற்கும் 100% நல்லது

Amavasai thirusti:

இன்று இரவு அதாவது, அமாவாசை இரவு 8 மணிக்கு மேல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து விடுங்கள். ஒரு முழு எலுமிச்சம் பழத்தை எடுத்து நான்கு பாகங்களாக வெட்டி விட்டு , நடுவே குங்குமம் தடவி விட்டு கல்லுப்பை நிரப்ப வேண்டும். பிறகு, அந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சுற்றி போட வேண்டும்.

பின்னர், அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து . ஒரு பேப்பரில் வைத்து மடித்து புதைத்து வைக்க வேண்டும். இல்லையென்றால், யார் காலிலும் படாத இடமாக தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள்.

Amavasai thirusti:

அப்படி இல்லை என்றால் வழக்கமான முறையில் வரமிளகாய்கள் போட்டு, சிவப்பு நிறத்தில் ஆரத்தி கலந்து வீட்டில் இருப்பவர்களுக்கு சுற்றி கூட திருஷ்டி கழிக்கலாம்.  சில பேர் வெறும் கற்பூரத்தில் திருஷ்டி கழிப்பார்கள். சில பேர் பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழிப்பார்கள். அது உங்களுடைய விருப்பம் தான். ஆனால்இன்றைய  தினம் ஏதாவது ஒரு வழியில் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி கழித்தே ஆக வேண்டும்.

மேலும் படிக்க..இயற்கை முறையில் கொசுவை ஓட ஓட விரட்ட இதை ட்ரை பண்ணுங்கோ...உங்கள் பணமும் மிச்சம், ஆரோக்கியத்திற்கும் 100% நல்லது

click me!