காகங்கள் வெறும் முகங்களை மட்டுமல்ல, பல சிக்கலான செயல்களையும் செய்யும் திறன் கொண்டவை.
கருவிகளை உருவாக்கி பயன்படுத்தும்.
கடினமான புதிர்களுக்கு தீர்வு காணும்.
வாகனங்கள் சாலையில் நட்டுகளை உடைப்பதை பயன்படுத்தி உணவு பெறும்.
தண்ணீரின் அளவை உயர்த்த கற்களை போட்டு உணவை எடுக்கும்.
எதிர்கால தேவைக்காக உணவை மறைத்து வைக்கும்.
மனிதர்களுக்கு நிகரான நினைவாற்றல்?
காகங்களின் மூளை அளவில் சிறியதாக இருந்தாலும், நரம்பு செல்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருப்பதால் தகவல்களை விரைவாக செயலாக்க முடிகிறது. அதனால், பிரச்சினைகளைத் தீர்ப்பது, முகங்களை அடையாளம் காண்பது, அனுபவங்களை நினைவில் வைத்துக்கொள்வது போன்ற திறன்களில் அவை பல விலங்குகளை விட முன்னிலையில் உள்ளன.