Chanakya Niti: கணவன் முன்னாடி மனைவி இந்த 4 விஷயங்களை செய்யவே கூடாதாம்.. ஏன் தெரியுமா?

Published : Jul 04, 2026, 09:02 PM IST

Chanakya Niti: தம்பதிகள் நீண்ட காலம் சந்தோஷமாக ஒற்றுமையாக வாழ கணவர் முன்னாடி மனைவி குறிப்பிட்ட 4 விஷயங்களை செய்யக்கூடாது என சாணக்கியர் சொல்கிறார். எது என்ன என விரிவாக பார்ப்போம்.

PREV
14
மனைவிகளுக்கு சாணக்கியர் தரும் அட்வைஸ்

கல்யாணம் என்பது ஒரே நாள்ல முடியுற பந்தம் இல்லை. வாழ்க்கை முழுக்க ஒண்ணா இருக்கணும்னு ரெண்டு பேர் செஞ்சுக்கிற ஒப்பந்தம்.  இப்போலாம் சின்ன சின்ன விஷயத்துக்கே சண்டை போட்டு விவாகரத்து வரைக்கும் போறாங்க. அப்படி ஆகாம, வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னா, நாம எப்படி இருக்கணும்னு தெரிஞ்சுக்கிறதோட, எப்படி இருக்கக் கூடாதுன்னும் தெரிஞ்சுக்கணும். 

சாணக்கியர், உறவுகளைப் பத்தி ரொம்ப சிறப்பா விளக்கியிருக்கார். கணவர் எப்போதுமே மனைவிகிட்ட அன்பா இருக்கணும்னா, மனைவி கணவர் முன்னாடி 4 விஷயங்களை செய்யவே கூடாதுன்னு சாணக்கியர் சொல்றாரு. அந்த நாலு விஷயங்கள் என்ன? ஏன் செய்யக்கூடாது? வாங்க பார்க்கலாம்.

24
கணவன் முன்பு வேறு ஆணைப் புகழ்வது

சாணக்கியர் கூற்றுப்படி உங்க‌ கணவரை மட்டம் தட்டிட்டு, மத்த ஆண்களை திரும்பத் திரும்ப புகழ்றது நல்லதில்லை. குறிப்பா, கணவர் முன்னாடியே இப்படி செஞ்சா, அவரோட ஈகோ காயப்படும். முதல் தடவை கேட்கும்போது ஒன்னும் தெரியாது. ஆனா, நீங்க திரும்பத் திரும்ப அதையே செஞ்சா, உங்க கணவர் சங்கடப்படுவார். இதனால, உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல பிரச்சனைகளும், தூரமும் அதிகமாகும். 

அதனால, கணவர் முன்னாடி மத்த ஆண்களைப் புகழாதீங்க. கோபத்துல வார்த்தைகளை விடாதீங்க. மனுஷன்னா கோபம் வரத்தான் செய்யும். ஆனா, கோபத்துல என்ன பேசுறோம்ங்கிறது ரொம்ப முக்கியம். கோபத்துல வாயை விட்டா, அது உங்க கணவர் மனசை காயப்படுத்தலாம். திருமண வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னா, கோபத்துல வார்த்தைகளை கொட்டவே கூடாது.

34
எண்ணெய் வழிஞ்ச முகத்தோடு இருக்காதீங்க

நிறைய பெண்கள் வெளியே போகும்போது ரொம்ப அழகா ரெடி ஆவாங்க. ஆனா, வீட்டுல கணவர் முன்னாடி, எந்த அலங்காரமும் இல்லாம நைட்டியோட சுத்திட்டு இருப்பாங்க. இந்தத் தப்பை செய்யவே கூடாதுன்னு சாணக்கியர் சொல்றாரு. மனைவி அலங்காரம் இல்லாம கணவர் முன்னாடி இருந்தா, அது வீட்டுக்கு நல்லதில்லையாம். குறிப்பா, காதுல கம்மல் இல்லாம கணவர் முன்னாடி நிக்கக் கூடாதாம். அப்படி இருந்தா லட்சுமி தேவி வீட்டுக்கு வரமாட்டாங்களாம். அதனால, இந்தத் தவறை செய்யாதீங்கன்னு சாணக்கியர் அறிவுறுத்துறார்.

44
கணவரை மற்றவர்களுடன் ஒப்பிடுவது
நிறைய பேர் பணம், அழகு, அந்தஸ்து விஷயத்துல தன்னோட கணவரை மத்தவங்களோட ஒப்பிட்டுப் பேசுவாங்க. இதனால கணவன் மனைவிக்குள்ள பிரச்சனைகள் அதிகமாகும்னு சாணக்கியர் சொல்றாரு. இருக்குறத வச்சு திருப்தியா வாழ்ந்தா, கணவன் மனைவி சந்தோஷமா இருக்கலாம்னு சாணக்கிய நீதியில சொல்லப்பட்டிருக்கு.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories