பிஸ்கட்களில் ஆரோக்கியமற்ற கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், செயற்கை இனிப்புகள் போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன. இவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதால் வரும் ஆபத்துகள் என்ன? அவற்றை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது ஏன் என்று இங்கு விரிவாக பார்க்கலாம்.
குழந்தைகள் பிஸ்கட் சாப்பிடுவதால் வரும் ஆபத்துக்கள் :
1. அதிகமாக பதப்படுத்தப்பட்டது : பொதுவாகவே பிஸ்கட் தயாரிப்புகளில் சுத்திகரிக்கப்பட்ட மாவு, செயற்கை சுவையூட்டிகள் நிறைவுற்ற கொழுப்புகள் சோடியம் மற்றும் வண்ணங்கள் பயன்படுத்தப்படுகிறது. பிஸ்கட்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் இது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மோசமான தீங்கு உண்டாக்கும். இதனால் அவர்களுக்கு மோசமான செரிமான பிரச்சனை, வயிற்று வலி, வீக்கம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.