இந்தியாவில் முதல் கார் தொழிற்சாலை! நிறுவியது யார் தெரியுமா?

Published : Aug 26, 2024, 03:09 PM IST

வால்சந்த் ஹிராசந்த் தோஷி 1945-ம் ஆண்டு மும்பைக்கு அருகில் பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி, இந்தியாவின் முதல் கார் உற்பத்தி நிலையத்தை நிறுவினார். முதல் கார் 1949-ல் தயாரிக்கப்பட்டது.  

PREV
14
இந்தியாவில் முதல் கார் தொழிற்சாலை! நிறுவியது யார் தெரியுமா?
Walchand Hirachand Doshi

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் 1882ல் பிறந்தவர் வால்சந்த் ஹிராசந்த். இவர் ஒரு முக்கிய இந்திய தொழிலதிபர் ஆவார். அவர் இந்திய தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார் மற்றும் வால்சந்த் குழுமத்தை நிறுவினார்
 

24
Walchand Hirachand Doshi

வால்சந்த் ஹிராசந்த், மும்பை பல்கலைக்கழகத்தில் BA பட்டம் பெற்றார், பட்டப்படிப்புக்குப் பிறகு, தனது குடும்பத்தின் பருத்தி மற்றும் பணக்கடன் வணிகத்தில் சேர்ந்தார். இருப்பினும், அந்த வேலையில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. குடும்பத் தொழிலைத் தொடர்வதில் அவருக்கு விருப்பமில்லாததால், அதை விட்டுவிட்டு ரயில்வே ஒப்பந்தக்காரராகப் பணியாற்றத் தொடங்கினார். பல அரசுத் துறைகளிலும் பணியாற்றினார்.
 

34
Walchand Hirachand Doshi

பின்னர், தானே சொந்தமாக தொழில் தொடங்க எண்ணி, 1945-ம் ஆண்டு மும்பைக்கு அருகில் பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி, இந்தியாவின் முதல் கார் உற்பத்தி நிலையத்தை நிறுவினார். அதன் முதல் கார் 1949-ல் தயாரிக்கப்பட்டது.

ரூ.1037 மட்டும் போதும்.. விமான டிக்கெட் விலை இந்த அளவுக்கு குறையும்னு கனவுல கூட நினைக்கல..
 

44
Walchand Hirachand Doshi

மேலும், இந்தியாவின் முதல் நவீன கப்பல் கட்டும் தளம் மற்றும் முதல் விமான தொழிற்சாலை இரண்டையும் அவர் நிறுவினார், நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பைச் செய்தார். இந்தியப் போக்குவரத்தின் தந்தை என்று அறியப்படும் வால்சந்த் ஹிராசந்த் தோஷி ஏப்ரல் 1953ம் ஆண்டு குஜராத்தில் காலமானார்.
 

click me!

Recommended Stories