பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால், அதற்கு அதிர்ஷ்டமோ அல்லது கடின உழைப்போ மட்டும் போதாது. நம் பழக்கவழக்கங்களில் செய்யும் சில எளிய மாற்றங்களே செல்வத்தை நம்மிடம் சேர்க்கும் என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
"ஐயோ.. காசே தங்க மாட்டேங்குது", "எப்பவும் பற்றாக்குறை தான்" என்று புலம்புவதை முதலில் நிறுத்துங்கள். பணத்தைப் பற்றி எப்போதும் நேர்மறையாகப் பேசுங்கள். நீங்கள் நேசித்தால் மட்டுமே பணம் உங்களிடம் வர விரும்பும்!
25
சில்லறையை மதியுங்கள்!
பர்ஸ் அல்லது பையில் சில்லறை காசுகளை அனாதையாக சிதற விடாதீர்கள். வீட்டிற்கு வந்ததும் ஒரு அழகான கண்ணாடிப்பானையில் உங்கள் சில்லறைகளைச் சேகரியுங்கள். காசுகள் நிரம்பும் சத்தம், உங்கள் ஆழ்மனதில் "நம்மிடம் செல்வம் பெருகுகிறது" என்ற எண்ணத்தை ரகசியமாக விதைக்கும்.
35
போனை கிளீன் பண்ணுங்க!
பழைய பர்ஸை சுத்தம் செய்வது பழைய ஸ்டைல். உங்கள் போனில் உள்ள GPay, Paytm போன்ற ஆப்ஸ்களில் தேவையில்லாத, தோல்வியடைந்த பழைய ட்ரான்சாக்ஷன் ஹிஸ்டரி அல்லது தேவையற்ற பில்களை டெலிட் செய்யுங்கள். டிஜிட்டல் பணப் புழக்கம் தடையின்றி இருக்க, பணப் பரிவர்த்தனை செய்யும் ஆப்ஸ்களை எப்போதும் ‘நீட்டாக’ வைத்திருங்கள்.
உங்கள் வீட்டின் தென்கிழக்கு (South-East) மூலையில் ஒரு சிறிய பச்சை நிற துணியில் சில நாணயங்களை முடிந்து வையுங்கள். இது வாஸ்து மட்டுமல்ல, செல்வத்தை ஈர்க்கும் ஒரு எனர்ஜி புள்ளி.அந்த இடத்தை எப்போதும் தூசியில்லாமல், நறுமணத்தோடு (ஊதுபத்தி அல்லது சென்ட்) வைத்திருப்பது பண வரவை அதிகரிக்கும்.
55
பில் கட்டும்போது சிரிங்க!
கரண்ட் பில்லோ, ஹோட்டல் பில்லோ கட்டும் போது கஷ்டப்பட்டுக் கொண்டே பணத்தைக் கொடுக்காதீர்கள். "இந்தச் சேவையைப் பெற எனக்குப் பணம் கொடுத்த இறைவனுக்கு நன்றி" என்று மனதார நினைத்து, மகிழ்ச்சியோடு பணத்தைக் கொடுங்கள். மகிழ்ச்சியோடு செலவழிக்கப்படும் பணம், பல மடங்காக உங்களிடமே திரும்பி வரும் என்பது பிரபஞ்ச விதி!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.